மதுரை, நவ.26 - டங்ஸ்டன் ஏல அறிவிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்தின் பாதிப்புகளைத் தடுத்து நிறுத்தும் வகையில், ஒன்றிய அரசின் டங்ஸ்டன் ஏல அறிவிப்பை முழுமை யாக ரத்து செய்யவும், தொல்லியல், பல்லுயிர் பாதுகாப்பு பகுதிகள் அடங்கிய மதுரை மாவட்டத்தை பாரம் பரிய பண்பாட்டு பாதுகாப்பு மண்டல மாக அறிவிக்க வலியுறுத்தியும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொள்கை முடிவை அறிவித்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியு றுத்தி அரிட்டாபட்டி தாய் கிராமங்களான 48 கிராம மக்கள் அழகர்மலையில் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத் தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்க லம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர், அதா வது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்டெர்லைட் ‘புகழ்’ வேதாந்தா குழு மத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்ப தற்கான ஏலத்தை எடுத்திருக்கிறது. இதற்கு மேற்கண்ட ஊர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரு கிறார்கள்.
இந்நிலையில் மேற்கண்ட ஊர்களைச் சார்ந்த பிரதிநிதிகள், அரிட்டாபட்டியில் ஒன்று கூடி சுரங்கம் அமையாமல் இருப்பதற்கு என்ன வகையான போராட்டங்களை மேற் கொள்ளலாம் என்ற ஆலோசனை நடத்தினர்.