districts

img

மதுரைக்கு கிடைத்த அற்புதமான வேட்பாளர் சு.வெங்கடேசன்

மேலூர், ஏப். 5 - மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வெள்ளி யன்று கீழவளவு பெரியகடை வீதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

இதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பங்கேற்றுப் பேசுகை யில், ‘‘தேசத்தைப் பாதுகாப்பதற்கான அரச மைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல் இது.  இந்த மக்களவைத் தேர்தல் என்பது கொடுப்ப வர்களுக்கும் (ராகுல்), எடுப்பவர்களுக்கு(மோடி) மான தேர்தல். ஜனநாயகத்திற்கும் சர்வாதி காரத்திற்கும் இடையே நடைபெறக்கூடிய தேர்தல். இந்தத் தேர்தலில் பாசிச சக்திகளை வீழ்த்துவோம். மகாத்மா காந்தியின் தேசத்தை பாசிச சக்திகளிடம் விட்டுவிட மாட்டோம்.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழித்து சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. அதிமுக மற்றும் பாஜகவுக்கு வாக்களித்தால் அது தேசநலனுக்கு எதிரான வாக்காக மாறும். பொதுமக்கள் சிந்தித்து சு.வெங்கடேசன் போன்ற திறமையான வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். மதுரை மண்ணுக்கு கிடைத்த அற்புதமான, எளிமையான வேட்பாளர் சு.வெங்கடேசன். தமிழ்நாட்டின் பெருமைகளை, தமிழ் மொழியின் சிறப்புகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கக் கூடிய மிகச்சிறந்த வேட்பாளர் சு.வெங்கடேசன். பல நூல்களை எழுதிய, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரான சு.வெங்கடேசனை கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்’’ என்று பேசினார்.