districts

img

பழிவாங்கும் நோக்கோடு பணிமாறுதல் செய்வதா? அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்

சிவகங்கை, ஏப்.13-  பழிவாங்கும் நோக்கோடு பணி மாறுதல் செய்வதை கண்  டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சிவகங்கை அங்கன்வாடி அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  தொழிற்சங்க விரோதப் போ ககோடு பேசியதை கண்டித்தும் பழிவாங்கும் நோக்கோடு பணி மாறுதல் செய்த உத்தரவை  ரத்து செய்ய வேண்டும், தொழிற் சங்க தலைவர்களை மிரட்டும் மாவட்ட ஆட்சியரின் போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கையில் அங் கன்வாடி அலுவலகத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் தலைமை வகிக் கின்றனர். சிஐடியு மாவட்டத்  தலைவர் வீரய்யா, மாவட்டச் செயலாளர் சேதுராமன், அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும்  உதவியாளர் சங்க மாவட்டச் செய லாளர் பாக்கியமேரி, பொது  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கையா, சாலை பணியாளர் சங்க மாவட்டச் செய லாளர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.