சின்னாளபட்டி, ஏப்.22- திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மட்டுமின்றி சுற்றியுள்ள பாலாம்பட்டி, உச்ச ணம்பட்டி, நரியூத்து, செட்டியபட்டி, மாலை கவுண்டன்பட்டி, சிலுக்குவார்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவி கள் இந்த பள்ளியில் பயில்கின்றனர். 50 ஆண்டுகளாகியும் இந்த பள்ளிக்கு இன்னும் விளையாட்டு மைதானமே அமைக்கப்பட வில்லை. இதனால் அரசு நடத்தும் விளை யாட்டுப் போட்டியில் கலந்து கொள்பவர் கள் பயிற்சி எடுக்க முடியாமல் சிரமப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் களின் விளையாட்டுத்திறன் பாதிக்கப்படு கிறது. மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு கொடுக்கப்பட்டுள் ளது. மாணவர்களின் நலன் கருதி அரசும் மாவட்ட நிர்வாகமும் இப்பள்ளிக்கு மைதா னம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளர்.