districts

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பை நாசமாக்கும் அமெரிக்கன் படைப்புழுக்கள்

விழுப்புரம், பிப்.13 - விழுப்புரம் மாவட்டத்தில் உணவு பயிர்களை அமெரிக்கன் படைப்புழுக் ்கள் தாக்கி சேதப்படுத்துவதால் விவ சாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு  பெரிய சேதத்தை விளைவிக்க கூடிய அமெரி க்கன் படைப் புழுக்கள் இம் மாவட்டத்தில் கரும்பு பயிர்களை முதன் முறையாக தாக்கியுள்ளது. வட அமெரிக்காவை பூர்விக மாகக் கொண்ட இந்தப் புழுக்கள் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய அளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் தானிய வகைகளான சோளம், உளுந்து, பாசிப்பயிறு,  அவரை உள்ளிட்ட பயிர்களை மட்டுமே இதுவரை தாக்கி வந்த இந்த அமெரிக்கன் படைப்புழுக்கள், தற்போது கரும்பு பயிர்களை தாக்கி யுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இம் மாவட்டத்தில் காணை, காணைக்குப்பம், ஆயந்தூர், ஆற்காடு, பெரும்பாக்கம், கஞ்ச னூர், முண்டியம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்க ளில் அமெரிக்கன் படைப்புழுக்களின் பாதிப்பை காண முடிகிறது.