விருதுநகர், மார்ச் 17- விருதுநகரில் டாக்டர் அம்பேத்கர் பண் பாட்டு மையத்தின் நடந்த விழாவில் விவ சாயிகளுக்கு இலவசமாக மருந்து தெளிப் பான் கருவிகள் வழங்கப்பட்டன. மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்கள் சக்தி சங்கம இயக்கம் உள்ளது. இதில், ஏரா ளமான பெண்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு இல வச மருந்து தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாஸ் இயக்கத்தின் நிர்வாகி கள் அழகேஷ்வரி மற்றும் தங்கேஷ்வரி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மதுரை புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளியின் அதிபர் மரியநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில், மதுரை மாவட்டம் இராமன்குளம், சின்னஉடப்பு, நல்லூர் ஆகிய கிராமங்க ளைச் சார்ந்த சுமார் 10 விவசாயிகளுக்கு இலவச மருந்து தெளிப்பான கருவிகளை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் இராபர்ட் நன்றி கூறினார்.