districts

img

கல்லூரி வளாகம் முழுவதும் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மழைக்காலங்களில் கல்லூரி வளாகம் முழுவதும் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீரை உள்வாங்கக் கூடிய பேவர்பிளாக் கல் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை நிர்வாகி வருண் பாரத், மாவட்டச் செயலாளர் அருண் தலைமையில்  கப்பல் விடும் போராட்டம் நடைபெற்றது.