மதுரை,ஜூன் 20- கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க மதுரை மாநகராட்சி நிர்வாகம் துணைபோகக்கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வீதி களில் பார்க்கிங் வசதிக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தினர்.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளி வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள், சித்திரை வீதிகளில் உள்ள வணிக வளாகங்கள் முன்பு கடை உரிமையாளர்கள், பணி யாளர்கள் மற்றும் வணிக நிறுவனங் களுக்கு வரும் பொதுமக்கள் ஆகியோ ரால் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் இத னால் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளி யூர் பக்தர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. இந்த காரணத்தைக் கூறிக்கொண்டு, இவ்வீதிகளில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துகிறோம்; வாக னங்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்து கிறோம் என்றும் அதற்கு கட்டணம் வசூ லிக்கவும் தனியார் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளி வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள், சித்திரை வீதிகளில் உள்ள வணிக வளாகங்கள் முன்பு கடை உரிமையாளர்கள், பணி யாளர்கள் மற்றும் வணிக நிறுவனங் களுக்கு வரும் பொதுமக்கள் ஆகியோ ரால் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என்றும் இத னால் கோயிலுக்கு வரும் உள்ளூர், வெளி யூர் பக்தர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது. இந்த காரணத்தைக் கூறிக்கொண்டு, இவ்வீதிகளில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துகிறோம்; வாக னங்கள் நிறுத்துமிடத்தை முறைப்படுத்து கிறோம் என்றும் அதற்கு கட்டணம் வசூ லிக்கவும் தனியார் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநகராட்சி அலுவலக அறிஞர் அண்ணா மாளிகையில் ஜூன் 19 புத னன்று மாநகராட்சி துணை ஆணை யர்கள் சரவணன், தயாநிதி தலைமை யில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை ஆணையர் குமார், உதவி ஆணையர் செல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மொத்த வணிகர்கள், சிறுகுறு வியாபாரிகள், கனரக வாகன ஓட்டுநர்கள், தொழிற்சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
முடிவு எடுத்துவிட்டு கூட்டம் நடத்துவதா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன் பேசுகையில், மதுரை இன்னும் பெரிய கிராமமாகத்தான் உள்ளது. பல தொழில்கள் அழிந்துவருகின்றன. மொத்தமாக விற்பனை செய்யும் பல சரக்கு கடைகளும், ஜவுளிக்கடைகள் மட்டுமே அதிகமாக உள்ளன. இங்கு வரும் சில்லரை வியாபாரிகள், வாடிக்கை யாளர்கள் கொண்டு வரும் வாகனங் களுக்கும் கட்டணம் விதித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் துணைபோவதாகவே தெரிகிறது. கட்டண பார்க்கிங் வசதியை கொண்டுவருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துவிட்டு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதாகவே தெரிகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிறு வியாபாரிகளிடம் மட்டுமே கெடுபிடி
பைப் கடை உரிமையாளர் வேணு கோபால் தெரிவிக்கையில், பெரிய கார்ப்ப ரேட் நிறுவனங்களின் கடைகளுக்கு போக்குவரத்து போலீசார் எந்த கெடுபிடி யும் காட்டுவதில்லை. சில்லரை வியாபாரி களின் கடைகளுக்கு வரும் மக்களிடமே கெடுபிடி காட்டப்படுகிறது. சரக்கு வாக னங்களில் பொருட்களை ஏற்றி இறக்க வரும் சிறு, குறு வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. இப்பாதை களில் மீறிச் செல்வோர் மீது அபராதம் விதித்தாலே போக்குவரத்து நெரிசலை குறைத்துவிடலாம். எனவே பார்க்கிங் வசதிக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அடியோடு ரத்து செய்யவேண்டும்.
மாமன்றத்தில் சிபிஎம் எதிர்க்கும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் பேசுகையில், இத்திட்டத்தை இன்றே கைவிட்டதாக அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஜூன் 28அன்று நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்திட்டத்தை எதிர்த்து குரலெழுப்புவோம் எனக் கூறியவுடன், அங்கு வந்திருந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் அவரு க்கு கை கொடுத்து நன்றி கூறினர். தனியாரோடு இணைந்து பார்க்கிங் வச திக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இக்கூட்டத் தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.