திருநெல்வேலி, ஏப் .29- நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிக ளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட் டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவற்றை பரி சீலனை செய்து உடனடி நட வடிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 6.25 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போன்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 200 மதிப்பில் தையல் எந்திரங்கள் வழங்கி னார். மொத்தம் ரூ.7.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் குமார தாஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.வள்ளியூரை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுத்து அலுவல கங்கள் உள்ளே செல்வதற்கு மாற்றுத்தறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்து தரவேண்டும் என கூறியிருந்தனர்.கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்ற மாற்றுத்திற னாளி அளித்த மனுவில் மாநகர், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள கட்டண கழிப் பிடங்களை மாற்றுத்திறனாளி களுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என கூறியிருந்தார்.