காலமானார்
இராமநாதபுரம், டிச.1- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தனம் (86) சனியன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா.கலையரசன், கண்ணகி, ராஜ்குமார், முத்துராமு, மயில்வாகணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.முருகன், முத்துவிஜயன், முத்துச்சாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்க மாவட்டச் செயலாளர் வான் தமிழ் இளம்பரிதி, முது குளத்தூர் தாலுகா குழு உறுப்பினர்கள் முனியசாமி, சண்முகையா, வைஷ்ணவி, ரஜினிகாந்த், முத்துமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மறைந்த சந்தானம் சிபிஎம் தாலுகா குழு உறுப்பின ரும், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலக்குழு உறுப்பினருமான சந்திரசேகரன், சிபிஎம் முதுகுளத்தூர் நகர் கிளைச் செயலாளர் முனியசாமி ஆகியோரின் தந்தையாவார்.
இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி
அருப்புக்கோட்டை, டிச.1- அருப்புக்கோட்டை அருகே 4 வழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி புளியமந்தை தெரு வைச் சேர்ந்தவர் மணிகண்டன்(46). இவர் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். பந்தல்குடி புற வழிச்சாலை அருகே வந்த போது மற்றொரு வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்பிக் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டின் அருகே வெடி தயாரித்தவர் மீது வழக்கு
ஏழாயிரம்பண்ணை, டிச.1- ஏழாயிரம்பண்ணை அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஏழாயிரம்பண்ணை சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். எலு மிச்சங்காய்பட்டி கிராமத்தில் முருகன் என்பவரது வீட்டின் அருகே 30 சாட் வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதை யடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முரு கன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இரு சக்கர வாகனம் மாயம்
விருதுநகர், டிச.1- விருதுநகரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது. விருதுநகர் சிவந்திபுரம் காட்டுத் தெருவைச் சேர்ந்த வர் சங்கரபாண்டியன்(73). இவர் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வழக்கம் போல வீட்டின் முன்பு நிறுத்தி ருந்தாராம். திரும்ப வந்து பார்த்த போது வாகனத்தை காண வில்லையாம். இதுகுறித்து சங்கரபாண்டியன் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மருத்துவ முகாம்
இராமநாதபுரம், டிச.1- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெ ரும் இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். உடன் மருத்து வர் ஆர்.கே.திலீப்குமார் உள்ளார்.
ஓட்டுநரை வெட்டி பணம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
சிவகாசி, டிச.1- சிவகாசி அருகே ஓட்டுநரை அரிவாளால் வெட்டி பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வரு கின்றனர். கரூரில் உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி( 51). லாரி ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், திருத்தங்கல்லில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சரக்கு களை ஏற்றி வட மாநிலத்திற்கு செல்வதற்காக லாரியுடன் வந்துள்ளார். திருத்தங்கல்லில் லாரியை நிறுத்திவிட்டு ரயில் நிலை யப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த இரு மர்ம நபர்கள், கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் ரூ.200 கொடுத்துள்ளார். அப்போது அவர்கள், கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, கிருஷ்ணமூர்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், ரயில் நிலைய கேட் கீப்பரிடம் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர்கள் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், டிச.1- வத்திராயிருப்பு மற்றும் கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். வத்திராயிருப்பு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் தொடக்கப் பள்ளிக்கு அரு கில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற அழ கம்மாளை சார்பு ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் கைது செய்து விசாரித்து வருகிறார். இதேபோல் கிருஷ்ணன் கோவில் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யில் புகையிலை விற்ற மூவரை வென்றான் பகுதியைச் சேர்ந்த கோட்டை ராஜா என்பவரை சார்பாய்வாளர் வேல் முருகன் கைது செய்து விசாரித்து வருகிறார்.
நெகிழி கழிவுகளை எரித்த நிறுவனத்திற்கு அபராதம்
சிவகாசி, டிச.1- சிவகாசி அருகே நெகிழி கழிவுகளை பொது இடத்தில் எரித்த நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. சிவகாசி அருகே செங்க மலநாச்சியார்புரம் ஊராட்சி க்கு உட்பட்டது கங்காகுளம். இங்கு தனியாருக்கு சொந் தமான பாலிபேக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத தின் நெகிழி கழிவுகளை பொது இடத்தில் கொட்டி தீ வைத்துள்ளனர். எனவே, அதிலிருந்து கரும்புகை யானது அப்பகுதி முழுவ தும் பரவியதோடு, சுற்றுச் சூழலை மாசுபடுத்தியுள்ளது. இந்நிலையில், அவ்வழி யே சென்ற மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன், உடனடியாக அந்நிறுவனத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இத னைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி கள் மற்றும் மாசுக்கட்டுப் பட்டு வாரியத்தினர் ஆய்வு செய்தனர். பின்பு, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தியதற் காக அந்த நிறுவனத்திற்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித் தனர்.
534 இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு செல்ல நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
விருதுநகர், டிச.1- விருதுநகர் மாவட்டத் தில் சிறப்பு கள ஆய்வு செய்ததில் 534 இடைநிற்றல் மாணவர்கள் கண்டறி யப்பட்டு, பள்ளிப்படிப்பை தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறி யதாவது: விருதுநகர் மாவட்டத் தில் உள்ள மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடித்து, உயர் கல்வி சேர் வதை உறுதி செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு, செப்.1 இல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அருப்புக்கோட்டை ஒன்றி யத்தில் 30 மாணவர்களும், காரியாபட்டியில் 22, நரிக்குடி யில் 14, இராஜபாளையத் தில் 74, சாத்தூரில் 47, சிவ காசியில் 130, திருவில்லி புத்தூரில் 37 மாணவர்களும், திருச்சுழியில் 31, வெம்பக் கோட்டையில் 68, விருதுநக ரில் 63, வத்திராயிருப்பில் 18 மாணவர்கள் என மொத்தம் 534 மாணவர்கள் தொடர்ச்சி யாக 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றலாக உள்ளனர். இந்நிலையில், ஒவ் வொரு அலுவலர்களும், மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடை நிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர நட வடிக்கை எடுக்க கள ஆய் வில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படு கிறது. அவர்களுக்கு தேவை யான மருத்துவ மற்றும் நிதி யுதவி வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வ மின்மையை போக்கி மீண் டும் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என தெரிவித்துள்ளார்.
உதவித் தொகைக்காக பல மாதங்களாக காத்து கிடக்கும் 500 மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் பாதுகாவலர்கள்
விருதுநகர், டிச.1- விருதுநகர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் அவர்களை பராமரிக்கும் பாதுகாவ லர்கள் என 499 பேர் உதவித் தொகை கோரி மனு அளித்தும் கிடைக்கா மல் பல மாதங்களாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் மாற்றுத் திறனாளி கள் இருந்த போதும், அதில் வெறும் 8 ஆயிரம் பேருக்குத் தான் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான உண்மை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளி வந்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த ஜெயக் குமார் என்பவர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவல கத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில விபரங்களை கேட்டுள்ளார். அதற்கான பதில் தரப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சி தரும் வகையில் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள மாற்றுத் திறனாளி களின் எண்ணிக்கை 41,752 பேர் என வும், அதில் அரசின் சார்பில் உதவித் தொகை வாங்குவோர் வெறும் 8,005 பேர் எனவும் பதில் தரப்பட் டுள்ளது. மேலும், மனவளர்ச்சி குன்றியோ ருக்கான பராமரிப்பு உதவித் தொகை கோரி விண்ணப்பித்துள் ளோர் எத்தனை பேர் என்ற கேள் விக்கு, 344 பேர் மனு அளித்தும் உதவித் தொகை கிடைக்காமல் காத்து கிடக்கின்றனர் என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மனவளர்ச்சி குன்றியோரை பராமரிக்கும் பாது காவலருக்கான உதவித் தொகைக் காக எத்தனை பேர் மனு அளித்து காத்து கிடக்கின்றனர் என்ற கேள் விக்கு, 155 பாதுகாவலர்கள் உத வித் தொகை கிடைக்காமல் காத்தி ருப்போர் பட்டியலில் உள்ளனர் என வும் விபரம் தந்துள்ளனர். தமிழக அரசானது, மாற்றுத் திற னாளிகளின் நலன்களுக்காக ஏரா ளமான சலுகைகளை வழங்கி வரு வதாக கூறிவருகிறது. இந்நிலை யில், விருதுநகர் மாவட்டத்தில் தக வல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான விபரங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உடனடியாக, மனு அளித்து காத்திருக்கும் மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் பாது காவலர்களுக்கு உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உதவித் தொகை கிடைக்காமல் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தி விரைவில் உத வித் தொகை கிடைத்திட உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென வும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜன.4ல் எரியோட்டில் மாநாடு
திண்டுக்கல், டிச.1- தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலை ஞர்கள் நல சங்கத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் நாட்டுப்புற கலை விழா மற்றும் மாநாடு வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதியில் எரியோடு பகுதியில் நடைபெறு கிறது இந்த மாநாட்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற மாநில தலைவர் சத்யராஜ் சிறப்புரையாற்றுகிறார். இது தொடர்பாக சனியன்று வடமதுரையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜெயப்பிர காஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நட ராஜன். மாவட்டத் துணைத் தலைவர்கள் ராமசாமி, வேல்முருகன், மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட இணை செயலாளர் வடிவழகு, மாவட்ட அவைத் தலைவர் பழனிவேல், பொருளாளர் முனியாண்டி, மாவட்ட ஆலோசகர் முத்துக்காளை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். கலை விழா மற்றும் மாநாட்டை சிறப்பாக நடத்து வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது
பட்டமளிப்பு விழா: டிச.15 கடைசி தேதி
சின்னாளப்பட்டி, டிச.1- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத்தின் 38வது பட்டமளிப்பு விழா, 2023-24ல் பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்காக 2025 ஜனவரி மாதம் நடைபெறும். ஆன்லைனில் பட்டமளிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15.12.2024 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று காந்திகிராம கிராமிய பல்கலைகழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
நத்தம், டிச.1- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி யை சேர்ந்தவர் திருமலை(54) விவசாயி. இவர் வெளி யூர்களுக்கு செல்லும் போது பீரோ சாவியை அடுப்பங்கரையிலும், வீட்டுச் சாவியை வீட்டின் வெளியே உள்ள ஜன்னலிலும் வைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று விட்டு 29-ம் தேதி காலையில் திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமலை, இதுகுறித்து நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப் பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரசுப் பள்ளி மாணவர்க்கு விலையில்லா பொருட்களை வழங்காத கல்வி நிர்வாகம் சிவகாசி
சிவகாசி, டிச.1- சிவகாசியில் பள்ளி மாணவர்களுக்கான விலை யில்லா பொருட்களை வழங்காமல் காலதாமதம் செய்யும் வட்டாரக்கல்வி நிர்வாகத்தினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க மேலாண்மைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசியில் அய்யனார்புரம் காலனி ஊராட்சி நடு நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. அதில், தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்குத் தேவை யான விலையில்லா சீருடை, பை, புத்தகங்கள், நோட்டு கள், வண்ண பென்சில்கள் என இதர பொருட்கள் அனைத்தும் பள்ளியிலே கொண்டு வந்து சேர்ப்பதற்கான நிதி வழங்கியும் சிவகாசி வட்டாரக்கல்வி நிர்வாகம் வழங்கவில்லை. இது குறித்து, தலைமையாசிரியர் எழுத்துப்பூர்வமாக மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் மாணவர்கள் புதிய சீருடை இன்றி மாணவர்கள் பள்ளிக்கு வரும் அவல நிலை உள்ளது. எனவே, இதனை சுட்டிக்காட்டி வட்டாரக் கல்வி நிர்வாகம் விலையில்லாப் பொருட்களான இரண்டாம் இணை சீருடைகள், புத்தகப்பை போன்றவற்றை உடனே வழங்க மாவட்ட ஆட்சிரிடம் புகார் மனு அளிப்ப தென தீர்மானம் நிறiவேற்றியுள்ளனர்.
ரயிலிலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
சின்னாளப்பட்டி, டிச.1- திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறையை அடுத்த செட்டியபட்டி பிரிவு அருகே திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்வே தண்ட வாளத்தின் ஓரமாக அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் அடிபட்டு உயிரி ழந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளர் கேசவன் தலை மையிலான காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், இறந்தவர் மதுரை மாவட்டம் கரும்பாலை காந்திநகர் ராஜா முகமதுவின் மகன் முகமது மீரான் (25). இவருக்கு திருமணமாகி சுமார் 6 மாதங்கள் ஆவதாக வும், கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது அவர் தனது தாய் தந்தையினருடன் வசித்து வருவதாகவும் கூறப்படும் நிலை யில், திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ஏதோ ஒரு ரயில் வண்டியில் தவறி விழுந்து உயிரிழந்த அவர், படியில் அமர்ந்து பயணம் செய்த போது தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை செய்து வரு கின்றனர்.
நத்தம் அருகே வத்திபட்டியில் கபடி போட்டி
நத்தம், டிச.1- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் கபடி போட்டி நடை பெற்றது. தெற்கு ஒன்றிய திமுக செய லாளர் ரத்தினக்குமார் தலைமை தாங்கி னார். முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்ப லம் கபடி போட்டியை தொடங்கி வைத் தார். பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.15 ஆயிர மும், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங் கப்படுகிறது. முன்னதாக தொடக்க விழாவில் நத்தம் தொகுதி தேர்தல் பார்வையாளர் ரஞ்சன்துரை, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன், ஊராட்சி மன்ற தலைவர் சாத்திபவுர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வறுமை, பட்டினியில்லாத வளர்ச்சிதான் அனைவருக்குமான வளர்ச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி
மதுரை, டிச.1- மதுரை அழகர்கோவில் சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமி ழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தி னராக பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது: மதுரை பழங்கால நகரம். கலாச்சாரம், வணிகம் ஆகியவற்றில் பண்டைய காலத்தி லேயே சிறந்து விளங்கிய நகரம். வணி கத்தில் சிறந்து விளங்கிய ரோம் நகரோடு வணிகத்தொடர்பு கொண்டு ஏற்றுமதி, இறக்குமதியில் சிறந்து விளங்கிய நகரம் மதுரை. தற்போது இளைஞர்கள் நிரம்பிய இந்தி யாவாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டும். சவால்கள் தான் அனு பவத்தை தரும், தலைமைப் பண்பை அளிக்கும். இளைய தலைமுறை தொழில்முனை வோர் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தொழில் முனைவோ ருக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது. சுய ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை. சுய ஒழுக்கமே தலைமைப் பண்பு, பொருளாதாரம், நேர மேலாண்மை அனைத்துக்கும் முக்கிய காரணமாக உள்ளது. தற்போதும் கூட வீடில்லாதவர்களும், வறுமையோடு பட்டினியோடு இருப்ப வர்களும் உள்ளனர். வளர்ச்சி என்பது அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றம் தொழில்முனைவோர் கையில் உள்ளது. தொழில் முனைவோர் வழக்கமான செயல்பாட்டை கொண்டிராமல் தனித்து வமாக இயங்க வேண்டும். உற்பத்தி என்பது நமக்காக மட்டுமே இல்லாமல் சர்வதேச சந்தையையும் கருத்தில் கொண்டு இருக்க வேண்டும். தரமான பொருட்களை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். வளர்ச்சி என்பது தனிநபர் வளர்ச்சி, குடும்பம் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மாநில வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்ற அடுக்கு முறைகளை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது சிறு வயதிலேயே நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி போன்றவற்றில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும். தற்போது உலகில் பல்வேறு நாடுகளி டையே போர்ச்சூழல் நிலவி வந்தாலும் இந்தியா அனைத்து நாடுகளுடனும் நட்பு றவு கொண்டுள்ளது. மேலும் போரில் எதி ரெதிராக உள்ள இரு நாடுகள் கூட இந்தி யாவின் கருத்துக்கு மதிப்பளிக்கின்றன. இது உலகில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளதை நிருபிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர் சந்தை கடலை எண்ணெய், பாமாயில், வத்தல் பருப்பு வகைகளின் விலை சரிவு
விருதுநகர், டிச.1- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு உள்ளிட்ட அனைத்து பருப்பு வகைகளின் விலை மற்றும் கடலை எண்ணெய், பாமா யில், வத்தல் ஆகியவற்றின் விலை குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ.2.750 என விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. எனவே, டின் ஒன்று ரூ.2,700 என விற்பனையானது. பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ. 2,200 என விற்பனையானது. இந்த வாரம் டின் ஒன்றிற்கு ரூ.50 குறைந்துள்ளது. எனவே, ரூ.2150 என விற்பனையாகிறது. வத்தல் ஏ.சி நாடு வகையானது குவிண்டால் ஒன்று ரூ.13 ஆயிரம் முதல் ரூ.16,500 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 வரை குறைந்து, தற்போது ரூ.12ஆயிரம் முதல் ரூ.14 ஆயி ரம் வரை விற்கப்படுகிறது. முண்டு வத்தல் கடந்த வாரம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற் பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகமாக வந்த கார ணத்தால் மூட்டைக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பு லயன் வகையானது 100 கிலோ ரூ.15,500 முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.500 வரை குறைக் கப்பட்டு, தற்போது மூட்டை ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் 15,200 வரை விற்பனை யாகிறது. உருட்டு உளுந்தும் பருப்பு 100கிலோ கடந்த வாரம் ரூ.12,400க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.400 குறைக்கப்பட்டு மூட்டை ஒன்று ரூ. 12 ஆயி ரம் என விற்கப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ.10,200 என விற்பனையானது. இந்த வாரம் ரூ.400 குறைவு ஏற்பட்டு, தற்போது ரூ. 9,800க்கு விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200 முதல் 10,500 வரை விற்பனை யான நிலையில் மூட்டைக்கு ரூ.600 குறைந்துள்ளது. எனவே, ரூ.9,600 முதல் 9, 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளைப் பட்டாணி 100 கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,100 வரை விற்ற நிலை யில் மூட்டைக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.3,900 முதல் ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.