districts

img

பதவியேற்பு விழா

திருவில்லிபுத்தூர், ஜூலை 9- ரோட்டரி கிளப் ஆப் மல்லி சார்பாக 4 வது பதவி யேற்பு விழா நடைபெற்றது. எஸ்.சண்முகவேல் பாண்டி யன் பதவியேற்றார். முன்னாள் ஆளுநர்  முத்து அசெம்பிளி சேர்மன் மேஜர் டோனர். சண்முகவேல் நடராஜ் உதவி ஆளு நர் இராஜசேகர்  ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்துராமலிங்க குமார்,  இராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு சேலை, வேட்டி, அரிசி  போன்றவை வழங்கப்பட்டது. மாநில அளவில் அரசு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இன்றைய நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காளை யார்கோவிலில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்: திங்கள்  கிழமை மாலை 5 மணி. பங்கேற்பு: மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஸ்ரீதர், எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன், ஒன்றியச் செயலாளர் தென்னரசு. 

;