districts

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வயநாடு நிவாரணத்திற்கு ரூ.4 லட்சம்
மதுரையில் சிபிஎம், வெகுஜன அமைப்புகள் வழங்கல்

மதுரை, ஆக. 23-  மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அரங்குகள் சார்பில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி  வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மதுரை மாநகர் சார்பில் 2 லட்சத்து 45 ஆயிரம், சிஐடியு மதுரை மாநகர் சார்பில் ரூ.1 லட்சம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் சார்பில் ரூ. 40 ஆயிரம்,  இந்திய மாணவர் சங்கம் மதுரை  மாநகர் சார்பில் ரூபாய் 18 ஆயிரம் என மொத்தம் ரூ. 4 லட்சத்து 3 ஆயிரம் வழங்கப்பட்டது

காலமானார்

மதுரை. ஆக.23-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா குழு உறுப்பினர் மா. செந்தில்குமரனின்  தாயார் மீனாட்சி அம்மாள் (82). உடல் நல குறைவினால் புதனன்று  மாலை காலமா னார்.  அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின்  மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்  கே.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பா.ரவிச்சந்திரன், திருப்ப ரங்குன்றம் தாலுகாச் செயலாளர் மு.ஜெயக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பா.தமிழரசன், நா.விஜயா உட்பட தாலுகா  குழு உறுப்பினர்கள்  பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வியாழனன்று மாலை நடைபெற்றது.

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்

மதுரை, ஆக. 23-  மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற பெண்  இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அய்யம் பட்டி  ஏ.கொக்குளத்தைச் சேர்ந்த பாண்டி மனைவி பழனி யம்மாள்(78). இவர் தனது உறவினரான பழனிச்சாமியு டன் மதுரை ரயில் நிலையம் செல்வதற்காக, மேற்கு வெளி வீதியில் வியாழனன்று  மாலை நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம்  பழ னியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

விபத்து தொடர்பாக  அவரது மகன் இதயக்கனி அளித்தப் புகாரின் பேரில் நகர்ப் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த மதுரை டிவிஸ் நகரைச் சேர்ந்த கேசவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மத்தியச் சிறையில்  ஆயுள் தண்டனை கைதி தற்கொலை

மதுரை, ஆக. 23-  மதுரை மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனை சிறைவாசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வைபட்டி பகுதியைச் சேர்ந்த தவ ஈஸ்வரன் (28). இவர் கடந்த 2018 இல் சின்னமனூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற  கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் நீதிமன்றம் 2023இல் தவ ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து தவ ஈஸ்வரன் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 இந்நிலையில் தவ ஈஸ்வரன் சிறை வளாகத்தில்  வெள்ளியன்று  காலை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த சிறைக்காவலர்கள் உடனடி யாக தவ ஈஸ்வரனை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தவ ஈஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரி ழந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து தவ ஈஸ்வரன் சடலம் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக சிறை நிர்வாகம் அளித்தப் புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து  தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தவ ஈஸ்வரன் தற்கொலை தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணையும் நடைபெறுகிறது.

தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையைக் கொடுத்து மோசடி

மதுரை, ஆக. 23- மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகையைக் கொடுத்து ரூ.62 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார்  தேடி வருகின்றனர்.

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலையில் தனியார் நகை அடகு நிறுவன கிளை இயங்கி வருகிறது. இங்கு மேலாளராக பணிபுரிபவர் சிவப்பிரகாசம். இவர்  ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறுவனத்தில் பணியில் இருந்துள் ள்ளார். அப்போது செல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் இவரது நிறுவனத்துக்கு வந்து, தனக்குச் சொந்த மான 28 கிராம் தங்க நகையை மீனாட்சிபுரத்தில் உள்ள அடகுக் கடையில் ரூ. 80 ஆயிரத்துக்கு அடகு வைத்திருப்ப தாகவும், அதில் ரூ.20 ஆயிரம் செலுத்தி விட்டதாகவும், மீதி உள்ள ரூ.62 ஆயிரத்தைச் செலுத்தி நகையை திருப்பி னால், அவரது நிறுவனத்தில் மறு அடகு வைப்பதாகவும் கூறியுள்ளார். இவரது பேச்சை நம்பிய மேலாளர் சிவப் பிரகாசம், நிறுவன ஊழியர் அருண்குமாரிடம் ரூ.62 ஆயி ரத்தை கொடுத்து,  குமாருடன் அனுப்பி வைத்துள்ளார். இரு வரும் சம்பந்தப்பட்ட அடகுக் கடைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அருண்குமாரை வெளியில் நிறுத்தி விட்டு, நகை அடகுக்கடைக்குள் குமார் மட்டும் சென்று பணத்தை செலுத்தி ஒரு பொட்டலத்தில் நகையை பெற்றுள்ளார். இதையடுத்து இருவரும் நகை அடகு நிறுவனத்துக்கு வந்த நிலையில், மீட்கப்பட்ட நகையை அருண்குமாரிடம் கொடுத்த குமார்,  தனது மனைவியை அழைத்து வருவ தாகக்கூறிச் சென்றார். ஆனால் வெகு நேரமாக அவர் வராததால் சந்தேகமடைந்த  ஊழியர்கள் நகையை பரிசோ தித்தனர். இதில் அந்த நகை போலியானது என்று தெரிய  வந்தது. இதையடுத்து மேலாளர் சிவப்பிரகாசம் அளித்தப்  புகாரின்பேரில் செல்லூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.