districts

img

நான் முதல்வன் திட்டம் மதுரையில் பலனடைந்தோர் 4,285 பேர்

மதுரை, டிச.12- மதுரை மாவட்டத்தில் “நான் முதல்வன்”  திட்டத்தின் கீழ் பத்து அரசு மற்றும் தனி யார் பொறியியல் கல்லூரிகளில்  20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்க திடடமிடப்பட்டு  4,285 மாணவ, மாணவிகள் பயிற்சி நிறைவு செய்து பயனடைந்துள்ளதாக செய்தி மக் கள் தொடர்பு அலுவலர் சாலி  தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ம. கயிலைச் செல்வம் ஆகியோர் திங்க ளன்று தெரிவித்தனர். திட்டத்தின் பயன்பாடு குறித்து அவர்கள் கூறியதாவது:  “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மதுரை மாவட்ட இளை ஞர்கள் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்  கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன்  பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்து டன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜென்மன் மொழித் திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சி கள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு  பயிற்சிகள் என அனைத்தும் “நான் முதல்  வன்” இணையதளத்தின் மூலம் பெறு வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்  கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளை ஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் குறுகிய காலப் பயிற்சி களை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ் களையும் பெறலாம்.

இதற்கான இலவசப் படிப்புகள், குறைவான கட்டணத்துடன்  கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழ கத்தின் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்தவும் தேவை அடிப்ப டையிலான மற்றும் தொழில் சார்ந்த திறன்  களை வழங்கும் நோக்கத்துடன் உரு வாக்கப்பட்டு பல்வேறு குறுகிய கால  திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மதுரை மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் இரண்டு மற்றும்  நான்கு சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோ மோட்டிவ் சர்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிர்வாகி, ஒப்பனைக் கலை ஞர், சுய தொழில் தையல்காரர், சிசிடிவி இன்ஸ்டாலேஷன், நுண்ணீர் பாசன தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன்  பயிற்சி சார்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், விவரங்களுக்கு www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது மதுரை மூன்றுமாவடி பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ தெரிந்து கொள்  ளலாம் என்றனர்.