தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் 23-ஆவது அமைப்புதின நாள் மதுரையில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கொடியேற்று நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சோலையப்பன், மாவட்டப் பொருளாளர் முருகன், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ், நிர்வாகிகள் மாரியப்பன், பால்ராஜ், ரவிச்சந்திரன், மணிமாறன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா, தலைவர் ஜெ. மூர்த்தி இணைச் செயலாளர் பரமசிவம ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் ஏ. சுப்புராம் உன் உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நகல் எடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது