districts

மதுரை முக்கிய செய்திகள்

விடுதி காப்பாளருக்கு கொலை  மிரட்டல்: 2 பேர் கைது

தேனி, ஜன.9- தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் அமராவதி  நகரில் வசிப்பவர் மணிமொழி (57). இவர் உத்தமபாளை யம் அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். எரணம்பட்டியை சேர்ந்த மன்மதன்  (43), முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த  மலைச்சாமி (47)  ஆகியோர் மணிமொழியை ஒரு மாதம் முன் சந்தித்தனர். அப்போது, உங்கள் மீது ஊழல் புகார் மற்றும் மாண வர்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி சுவரொட்டி ஓட்டப் போகிறோம், பணம் கொடுத்தால் விட்டு விடு கிறோம் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே மிரட்டியுள்ளனர்.. கைபேசி மூலமும் மிரட்டியுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை ரெங்கநாதபுரம் தர்மா கோச்சிங் சென்டர் அருகே சென்ற மணிமொழியை இருவரும் வழிமறித்து கொலை  மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மணிமொழி கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி  தேனியில் 3 பேர் மீது வழக்கு பதிவு 

தேனி, ஜன.10- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குன்னூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கார்த்திகேயன் . பொறியி யல் பட்டதாரியான இவர் நண்பருடன் சென்னையில் தங்கி  பணியாற்றி வந்துள்ளார் .அப்போது ராணிப்பேட்டை மாவட்டம், மோகனாவரம் திமிரியை சேர்ந்த மதன்குமார் அறிமுகமாகி வேலூரில் உள்நாடு ,வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளார் .அதை நம்பிய  மதன்குமார், அவரது மனைவி கார்த்திகா ,அவரது நண்பன்  சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபு ஆகியோர்  வங்கிக் கணக்கிற்கு தேனி எஸ்பிஐ வங்கி கணக்கிலிருந்து ரூ.10.85 லட்சம் உட்பட ரூ 14.85 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமலும் ,பணத்தை திருப்பித்தராமலும் நம்பிக்கை மோசடி செய்து  விட்டதாக மூவர் மீது தேனி நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் புகார் அளித்தார் .நீதிமன்ற உத்தரவின் பேரில்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சீமைராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்

சிறுமியை படமெடுத்து மிரட்டி  நகை பணம் பறிப்பு: 3 பேர் கைது

மதுரை, ஜன. 10-  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே   மங்கலம்  பட்டியை சேர்ந்த சிவராமன் (21) என்பவரும் மதுரை கோ. புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் பழகியுள்ளனர்.   கீழவளவு மலைப்பகுதிக்கு வந்த இவர்களை மேல வளவு வி.எஸ்.நகரத்தைச் சேர்ந்த  விஜயகுமார் (27),   உத்தங்குடி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த வினோத்  குமார்(19) ஆகிய இருவரும் செல்போனில் படம் பிடித்து மிரட்டியுள்ளனர்.  மேலும் சிறுமி அணிந்திருந்த நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு சிறுமியை  அனுப்பியுள்ளனர். மேலும் சிறுமியிடம் அடிக்கடி பணம்  கேட்டு மிரட்டியதால் இதுதொடர்பாக சைல்டு லைன்  அமைப்பினரிடம்  சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அமைப்பினர் இதுதொடர்பாக விசாரித்து, சம்பவம் குறித்து ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்  தனர். இதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் உத்தர விட்டார். இதன்பேரில், கோ.புதூர் காவல்துறையினர்   சிவ ராமனிடம் விசாரணை நடத்தினர். இதில் இச்சம்பவத்தில்  சிவராமனுக்கும் தொடர்பு இருப்பது இதையடுத்து, காவல்துறையினர்  விஜயகுமார், வினோத்குமார், சிவ ராமன் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இயற்கை வளங்களை சூறையாடும் தனியார் நிறுவனத்திற்கு  ஆதரவாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம்

மார்க்சிஸ்ட் கட்சி  கடும் கண்டனம்

விருதுநகர், ஜன.10-  விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் அருகே விவசாயம் பாதிக்கும் வகையில் செயல்படும் கல்குவாரி நிறு வனத்திற்கு துணை போகும் விருது நகர் மாவட்ட நிர்வாகத்திற்கு  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் விருதுநகரில் எம்.ஆர்.வி. நினைவகத்தில் நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் முன்னிலை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது பங்கேற்றார்.   முடிவில் இக்கூட்டத்தில் நிறைவேற்  றப்பட்ட தீர்மானம் வருமாறு: விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் அருகே  அச்சம்தவிர்த்தான் , நரி யன் குளம், வடக்கு அச்சம்தவிர்த்தான் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.  இதன் அருகே, கே.எம்.சி. எனும் தனி யார் நிறுவனம், விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்கும் பணி யில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இப்  பகுதியில் உள்ள விவசாயமும், வாழ்  வாதாரமும் பாதிக்கப்படும் என இப்பகு தியைச் சேர்ந்த பொது மக்களும், விவ சாயிகளும் கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரையில் எவ்வித அனுமதியும் பெறாத கே.எம்.சி நிறுவனம், விவசாயி களிடம் 58 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியதோடு, லீசுக்கு எடுத்தும் இப்பகுதிதியில் ஆழமாக  மண்ணை தோண்டி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பெரிய பெரிய வெடிகளை வெடிக்கச் செய் கின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. அப்போது, உறங்கிக் கொண்டிருக்கும்  குழந்தைகள் பதற்றமடைந்து எழு கின்றன. இதனால், குழந்தைகளின் மன நிலை பாதிப்படையும் நிலை ஏற் பட்டுள்ளது. மேற்படி கே.எம்.சி நிறுவனம்,  வேலி போட்டு மூடி வைத்துள்ள பகுதிக்குள் மூன்று விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதனால், விவசாயி கள் தங்களது நிலங்களுக்கு செல்ல  முடியவில்லை. அரசுக்கு சொந்தமான   தரிசு நிலம் ஏழு ஏக்கரும் ஆக்கிரமிக கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, இருந்த விவசாய கிணறு ஒன்றையும்  மூடி யுள்ளனர். இரண்டு நீரோடைகள் முற்றி லும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்  நிலையில் தங்களது சொந்த நிலத்தை பார்க்கச் சென்ற முருகன், குமார் உள்  ளிட்ட 6 பேர் மீது கே.எம்.சி நிறுவனத்தின் தூண்டுதலின்பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் உள் ளிட்ட 20 பேர் மீது 170 என்ற பிரிவின் கீழ் கோட்டாட்சியர் வழக்குப் பதிவு செய் துள்ளார். மக்களின் வாழ்வாதாரங்களை சீர ழிக்கும், இயற்கை வளங்களை சூறை யாடும் தனியாருக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விருதுநகர் மாவட்டக்குழு வன்மை யாக கண்டிக்கிறது. விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்  டும். தனியார் நிறுவன கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இப்பகுதி மக்களின் விவசா யிகளின் வாழ்வாதாரம் பாதுகாக் கப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை ஊர்களுக்குச் செல்ல  அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இராமநாதபுரம், ஜன.10- ஜனவரி 15 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம்;  இன்றி, இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடு துறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர். புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும்; 12.01.2023, 13.01.2023 ரூ 14.01.2023 ஆகிய  நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்ப கோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பபூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம்  போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12.01.2023 முதல் 14.01.2023 வரை யும், அனைத்து முக்கிய. நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை  தெரிவித்து கொள்கின்றோம். மேலும் 12.01.2023 முதல் 14.01.2023 வரை சென்னையிலி ருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக  பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேரா வூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் அறிஞர்  அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும் நிலையத்திலி ருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்  கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாத புரம், இராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முது குளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடு துறை சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்  பட உள்ளது.  மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்  களுக்கு செல்ல 16.01.2023, 17.01.2023 ரூ 18.01.2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்  பட்டுள்ளது என்று மதுரை மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவருக்கு வாழ்நாள் சிறை

விருதுநகர், ஜன.10- விருதுநகரைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி(42). இவர்  தனது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத் துள்ளார்.  இதுகுறித்து திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெகஜோதிமணி,  வாழ்  நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் ரூ.2ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என வும் தீர்ப்பளித்தது.

காளைகள் -மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது 

மதுரை, ஜன.10- மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும், பாலமேட்டில் வரும் 16ஆம் தேதியும், வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும்  ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த 3போட்டிகளிலும் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன்  பதிவுகள் madurai.nic.in என்ற இணைய தளத்தின் மூலமாக  தொடங்கியது.  பதிவுசெய்யப்பட்ட காளைகள் அவனியாபுரம், பால மேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி  என தெரிவிக்கப்பட்டுள்ளது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவி யாளர் மட்டுமே அனுமதி. இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும்  நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்க ளுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்ப தற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி இதேபோன்று மாடுபிடி வீரர்களுக்கும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து இரண்டு நாட்க ளுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்ப தற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே அனுமதி பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதி யான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.  அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனு மதிக்கப்படுவர் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது. ஆன்லைன் பதிவால் உரிய பயிற்சி இல்லாத மாடு பிடி வீரர்கள் கலந்துகொள்வதால் உயிரிழப்புகள் அதி கரிக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தி னர் தெரிவிக்கின்றனர்.

நத்தம் அருகே சிறுமி பலாத்காரம்: முதியவர் கைது

நத்தம், ஜன.10- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி செடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 57). . இவர்  அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை  அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.  இதில் சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்படவே பெற்றோர் விசாரித்துள்ளனர்.அப்போது சிறுமி நடந்ததை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி யின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர்  விக்டோரியா லூர்துமேரி தலைமையிலான போலீசார் தங்கவேலை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் பகுதியில் பரவும் உன்னிக்காய்ச்சல்: கட்டுக்குள்ள இருப்பதாக அதிகாரிகள் தகவல்

திண்டுக்கல், ஜன.10- திண்டுக்கல் மாநகராட்சிப்பகுதியில் உன்னிக்காய்ச்சல் காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று  வருகிறார்கள். இந்நிலையில் உன்னிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக முறை யான மருத்துவம் செய்து கொள்ளாத தால் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் காந்திஜி நகரைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். திண்டுக்கல் மாநக ராட்சிப்பகுதியில் சுகாதார பணிகளை மாமன்றம் வேகப்படுத்தியது.  மாநகராட்சி மருத்துவர் இந்திரா காந்தி கூறுகையில், ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மண் தரைகளில் பணி யாற்றுபவர்களை இந்த நோய் எளிதில் தாக்கக்கூடியது. மாநகராட்சிப் பகுதி களில் உள்ள பாதாள சாக்கடைகளில் உள்ள சஸ்போன்களை மூட வேண்டும். மழைக்காலங்களில் செடிகொடிகளில் உள்ள பூச்சிகள், ஆடு, மாடுகள் மற்றும் வீட்டு செல்லப்பிராணிகள் மூலமாகவும் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அம்மைக்கு வரக்கூடிய சிறு புள்ளிகள் போல தோலில் ஏற்படக்கூடிய மாற்றங்  கள் இதன் அறிகுறிகளாகும். எனவே  இந்நோய்க்கு முறையான மருத்து வம் தேவை, மாநகராட்சி மருத்துவ மனையோ, அரசு மருத்துவமனையோ, அல்லது மருத்துவரையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று இந்திரா காந்தி தெரிவித்தார்.  துணை மேயர் ராஜப்பா பேட்டி இது தொடர்பாக திமுக நகரச்செயலா ளரும், மாமன்ற துணை மேயருமான ராஜப்பா தீக்கதிருக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:  திண்டுக்கல்லில் உன்னிக்காய்ச்சல் பரவுவது உண்மை தான். ஆனால் தற்போது அது கட்டுக்குள் உள்ளது. சமீ பத்தில் திண்டுக்கல் மாநகராட்சி 48வது வார்டில் உள்ள காந்திஜி நகரில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் மாநகராட்சி எல்லையை சேர்ந்தவர் இல்லை. ஊராட்சி ஒன்றியப் பகுதியை சேர்ந்தவர். இந்த காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய நோய் தான். 10 தினங்களுக்கு முன்பு கூட 42வது வார்டு பகுதியில் சிலருக்கு  இந்த நோய் தாக்குதல் இருந்தது. ஆனால் மாநக ராட்சி சுகாதார ஊழியர்களால் அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து உள்ளனர். கடந்த ஆண்டும் திண்டுக்கல்லில் இந்த நோய்க்கு 10 பேர் பாதிக்கப்பட்டனர். அப்போதும் திண்டுக்கல் மாமன்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்து வர்கள் சிறப்பாக பணியாற்றி சிகிச்சை  அளித்து குணமளித்தார்கள். எனவே  திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இது போன்ற புதுவித நோய்த்தாக்குதலை எதிர்கொள்ள நோய் பாதிக்கப்பட்டவர் களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். (நநி)

போகி பண்டிகை: மதுரை மாநகராட்சி அறிவிப்பு

மதுரை, ஜன. 10-   போகி பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படு வதை தவிர்க்க மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன் பாட்டில் இல்லாத பொருட்களை பொதுமக்கள் எரிக்கக்கூடாது என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் பழைய துணி , டயர் , ரப்பர் மற்றும் நெகிழி ஆகிய  பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் . மதுரை மாநகராட்சி  பகுதிகளில் ஆனையூர் , புதூர், சாத்தமங்கலம் , அருள்தாஸ்புரம் , காளவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள்,  மீனாட்சிஅம்மன் கோவில் பார்க் அருகில் , அனுப்பானடி நுண் உரக்கிடங்கு , திருப்பரங்குன்றம் கோவில் ஆர்ச் அருகில் ,  பழங்கா நத்தம் திருப்பரங்குன்றம் வார்டு அலுவலகம் ஆகிய10 இடங்க ளில்  பழைய பொருட்களை சுற்றுச்சூழல் மாசுபடாமல் மறுசுழற்சி  செய்ய, சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . எனவே இன்று  முதல் வரும் 14.01.2023 ஆம் தேதி வரை பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தனியாக பிரித்து வழங்க வேண்டும் . இதன் மூலம் புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங்  கேட்டுக்கொண்டுள்ளார்.