districts

img

தேனி மாவட்டத்தில் 699 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.18.49 கோடி நேரடிக்கடன் உதவி வழங்கல்

தேனி, ஏப்.27- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன(மகளிர் திட்டம்)த்தின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும்  தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ் வாதார இயக்கத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் 236 மகளிர் சுயஉத விக் குழுக்களுக்கு ரூ.4.68 கோடி மதிப்பிலான நேரடிக்கடனுதவி யும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 161 மகளிர் சுயஉத விக் குழுக்களுக்கு ரூ.2.31 கோடி மதிப்பிலான நேரடி கடனுதவி யும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் 145 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5.92  கோடி லட்சம் நேரடிக்கடனுதவி யும், போடிநாயக்கனூர் சட்ட மன்ற தொகுதியில் 157 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.58  கோடி மதிப்பிலான நேரடிக்கடனு தவியும் என மொத்தம் 699 மக ளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 18.49 கோடி மதிப்பிலான நேர டிக்கடனுதவி வழங்கப்பட்டுள் ளது. நலிவுற்றோர் மேம்பாட்டு நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் கம்பம் சட்டமன்ற தொகுதியில் 38 நபர்  களுக்கு ரூ.5.70 லட்சம் மதிப் பிலான நிதியும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 32 நபர்  களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பி லான நிதியும், ஆண்டிபட்டி சட்ட மன்ற தொகுதியில் 14 நபர் களுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பி லான நிதியும் என மொத்தம் 84 நபர்களுக்கு ரூ.15.06 லட்சம் மதிப்பிலான நிதி வழங்கப்பட்டுள்  ளது.

மேலும், இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சித்திட்டத் தின் கீழ் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் தற்போது 322 இளைஞர்களுக்கு எலக்ட்ரீசியன், கைபேசி, தையல், கணினி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் தமிழ்  நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய(மகளிர் திட்டம்)த்தின் சார்பில் ஒளிமயமான வாழ்க்கை யை ஏற்படுத்திக்கொடுத்த தமிழ்  நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்  தின் மூலம் பயனடைந்த கிரா மப்புற ஏழை, எளிய பெண்கள் தாங்கள் பெற்ற பயன்களை அக மகிழ்வோடு தெரிவித்தனர். உத்த மபாளையம் வட்டம், ஆனை மலையான்பட்டியில் செயல்  பட்டு வரும் காமாட்சியம்மன் மக ளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் கள் தெரிவிக்கையில், எங்களது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் சேர்ந்து காமாட்சியம்மன் கூடை முடைதல் சுய உதவிக் குழு வினை கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்றோம். வங்கியின் மூலம் 3 முறை நேரடிக் கடன் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம், ஆதார நிதியாக ரூ.15 ஆயிரம் மற்றும் ஆணைமலையான்பட்டி ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பு மூலம் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து

ரூ.50 ஆயிரம் தொழில் கடனாக பெற்று தொழில் முதலீட்டிற்காக பயன்படுத்தி வரு கின்றோம். நாங்கள் கேரள மாநி லம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மூங்கில் கம்புகள் இறக்குமதி செய்து கீற்றுகளாக பிரித்து பல்வேறு அளவுகள் மற்  றும் வடிவங்களில் மூங்கில் கூடை கள் உற்பத்தி செய்து உத்தம பாளையம் சுற்று வட்டார பகுதி கள் மற்றும் ராஜபாளையம், விருதுநகர், மதுரை சந்தை களுக்கு மொத்தமாகவும், சில்ல றையாகவும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றோம். இத்தொழிலின் மூலம் போதிய  வருமானம் ஈட்டி, மாதந்தோறும் வங்கி கடன் செலுத்தியது போக  மீதமுள்ள தொகையினை பங் கீட்டு குழு உறுப்பினர்கள் எந்த  கஷ்டமின்றி நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றோம். ஏழை,  எளிய பெண்களின் நிலைமையை  கருத்தில் கொண்டு இதுபோன்ற  திட்டங்களை தீட்டி செயல்படுத்தி  வருகின்ற தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரி வித்துக்கொள்கிறோம் என்று கூறி னர். இத்தகவலை தேனி மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் இரா.சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நா.விஜயகுமார் ஆகி யோர் தெரிவித்துள்ளனர்.