மதுரை, நவ.24- மதுரை மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ. 15 கோடி ரூபாய் அள விற்கு கல்விக் கடன் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதன்மூலம் அகில இந்திய அளவில் கல்விக் கடன் வழங்குவதில் மதுரை சாதனை படைத்திருப்பதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி. பெரு மிதம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பெற்றுத் தரப்படும் கல்விக் கடன் தொகை யானது, 6 வடகிழக்கு மாநிலங்க ளில் வழங்கப்படும் கல்விக் கடனை விட அதிகம் என்பதுடன், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் கல்விக் கடனில் 10 சதவிகிதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் வெள்ளியன்று மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் துணை முதல்வர் பியூலா ஜெர்சி வர வேற்றுப் பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அனில் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் தி.நாகராஜன், மதுரை மாவட்ட திட்ட இயக்குநர் சௌந்தர்யா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்து ராமலிங்கம், மதுரை வடக்கு மண்டலத் தலைவர் சரவண புவ னேஸ்வரி ஆகியோர் பங்கேற்ற னர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மேற்கண்டவாறு தெரி வித்தார். இம்முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந் திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, வடக்கு - 2 பகுதிக் குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், ஆர்.சசிகலா, வை.ஸ்டாலின், டி.செல்வா, மாமன்ற உறுப்பி னர்கள் டி. குமரவேல், வை.ஜெனி யம்மாள் மற்றும் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலக கல்விக் கடன் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் ராமமூர்த்தி, ஜெரோம் மற்றும் வங்கி மேலா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.