districts

img

‘அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்’ பிரச்சாரப் பயணம்

திண்டுக்கல், ஏப்.20-  திண்டுக்கல் மாவட்டத்தில்  அரசு பள்ளி களை கொண்டாடுவோம் என்ற முழக்கத்து டன் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு வாகன பிரச்சாரப் பயணம்  திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டது.  பள்ளி கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாச ருதீன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலு வலர் வளர்மதி, பழனி மாவட்ட தொடக் கக்கல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி, மாநகராட்சி பள்ளி  தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில்  சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுப் பொருட் களை பள்ளியின் தலைமை ஆசிரியர் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய லட்சுமி, இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஆசி ரிய ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத் ஆகி யோர் செய்திருந்தனர். (நநி)