விருதுநகர், ஜூலை 13- விருதுநகரில் 27 பட்டதாரி திருநங்கைகளுடனான “காபி வித் கலெக்டர்“ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், திருநங்கைகள் தங்களுக்கென்று தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கேற்ப தொழில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். அரசு மூலம் திருநங்கைகளுக்கு தேவையான உதவி களும், படிப்பதற்கும், வேலைவாய்ப்பில் தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்குள்ள சமூக சிக்கல்களை எதிர் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். அரசுப் பணிக்கான இலவச போட்டித்தேர்வு மையங்களில் சென்று படித்தால் எளி தில் வெற்றி பெற முடியும். அதன் மூலம் இச்சமூகத்தில் உங்களுக்கென்று, மதிப்பும், மரியாதையும் உண்டாகும் என்று தெரிவித்தார் இதையடுத்து பேசிய திருநங்கைகள், இந்நிகழ்ச்சி தங்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியதாகவும், தாங்க ளும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வாழ்வாதாரம் சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவாக பதிலளித்தார் எனவும் கூறினர்.