districts

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள், தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர், மே 25 - செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புதன்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய  நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பெரம்பலூர்  மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தாய்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்களின் நினைவைப் போற்றும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா துவக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளான தியாகி கிருஷ்ணசாமி காரை, தியாகி என். ஜி.சுப்பிரமணியன், குருசாமி நாயுடு, லாட புரம் தியாகி செங்கமலம், நாரணமங்க லம், செங்கமலம் மூப்பனார், நாரணமங்கலம்  தியாகி சவரிமுத்து  தொண்டமாந்துறை, தியாகி பச்சமுத்து கோனார், தொண்ட மாந்துறை, தியாகி அய்யாக்கண்ணு  பெரம்ப லூர், தியாகி மு.ராமசாமி, கூத்தனூர், தியாகி சு.முத்து, இரூர், ஆகியோர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களான தியாகி சி.மதன கோபால்பிள்ளை, வெங்கடேசபுரம், பெரம்ப லூர், தியாகி கிருஷ்ணசாமி நாயுடு குரும்ப லூர், தியாகி ரெங்கசாமி பெரம்பலூர், தியாகி துரைசாமி வரகுபாடி, தமிழறிஞர் சி.ராமராசு இணைபுரம் பெரம்பலூர் மாவட்டம், தமிழறிஞர் கி.வீரசிகாமணி பொம் மனப்பாடி, தமிழறிஞர் மு.செங்கமலை பொம்மனப்பாடி, தமிழறிஞர் வை.ரெங்க ராசன் மூங்கில்பாடி, தமிழறிஞர் வடிவேல் குன்னம், தமிழறிஞர் எஸ்.மணி ஆதனூர் ஆகி யோர்களது புகைப்படங்களும் பொதுமக்கள்  பார்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.