districts

img

அநியாய மின் கட்டண உயர்வு: புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,ஏப்.9- ஒன்றிய பாஜக, மாநில என்ஆர் காங்கிரஸ் அரசின் அணியாய மின் கட்டண உயர்வுக்கு எதிராக புதுச்சேரி மாநிலம் முதலியார் பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வை உடனடி யாக திரும்பப் பெறக் கோரியும் பெட்ரோல்-டீசல்,  சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலி யுறுத்தியும் புதுச்சேரி முதலி யார்பேட்டை தபால் நிலை யம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செய லாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நகரச் செயலாளர் மதிவாணன், சஞ்சய், மண வாளன், குணசேகரன், கோவிந்தராஜன், ராம லிங்கம், பொன்னுரங்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக மின் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில் தொலைக் காட்சிப் பெட்டி, டேபிள் ஃபேன், காஸ் சிலிண்டர்  ஆகிய பொருட்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணிவித்து முழக்க மிட்டனர்.