districts

img

தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 16-  தனி நல வாரியம் அமைக்கக்கோரி தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தையல் கலை தொழிலாளர்களுக்கு தமிழகம், கேரளம் போன்று தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.

அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மான  நல வாரி யத்தை செயல்படுத்த ரூ. 10 கோடி நிதி ஒதுக்க வேண்டும். அமைப்பு சாரா நல சங்கத்தில் படிவம் கொடுத்து அதிகபட்சம் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து தொழிலாளர்களை உறுப்பினர்களாக பதிவு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு தையல் கலை ஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மணிபாலன் தலைமை தாங்கினார்.  

சிஐடியு மாநிலச் செயலாளர் சீனி வாசன் துவக்கி வைத்தார். சிஐடியு மாநில நிர்வாகிகள்  கொளஞ்சியப்பன், மதிவாணன், ராஜ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்கத்தின் கௌரவத் தலைவர் தியாகராஜன், செயலாளர்  அப்துல் பஷீர், நிர்வாகிகள் மரியாள், முருகன், ரேவதி, லீலா, சரண்யா உள்ளிட்ட திரளான தையல் கலைஞர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.