மாஹேவில் பேரிடர் கால தற்காப்பு நீச்சல் பயிற்சி
மாஹே, ஜூலை 4- பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு மாஹேவில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாஹே மேகலா கமிட்டி சார்பில் மண்டல அளவில் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் அனைவருக்குமான தொடர் நீச்சல் பயிற்சி நடைபெற்றது. டிஒய்எப்ஐ கண்ணூர் மாவட்டத் தலை வர் முஹம்மது அப்சல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நீச்சல் பயிற்சியில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வும் மற்றும் பேரிடர் மழை வெள்ளக் காலத்தில் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்ச்சி
கடந்தாண்டு நீச்சல் பயின்ற மாணவர்கள் உட்பட அனை வருக்கும் வாலிபர்சங்க தலச்சேரி தொகுதிச் செயலர் சனீஷ், சிபிஎம் தலச்சேரி கமிட்டி செயலாளர் சுனில்குமார், வாலிபர் சங்கத்தின் மேகலா கமிட்டி செயலாளர் நீரஜ் புத்தாளம், மற்றும் சுதீஷ் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டவர் களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளித்தனர். நீச்சல் பயிற்சி யாளர்கள் பிரஜிலா, தியா, ஹரிலால் அனில்குமார் ஆகி யோர் இந்த நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
காலமானார்
புதுச்சேரி, ஜூலை 4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரக்கமிட்டி உறுப்பினரும், சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாநிலத் தலைவர் மணவாளனின் தாயார் கே.முனியம்மாள் (வயது 90) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
புதுச்சேரி முதலியார்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு, சிபிஎம் புதுச்சேரி மாநில செய லாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன்,பிரபுராஜ்,கலியமூர்த்தி,நகரக்கமிட்டி செயலாளர் மதி வாணன், ஆட்டோ சங்க பொதுச்செயாளர் விஐயகுமார் உட்பட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் மலரஞ்சலி செலுத்தி னர். பின்னர் அன்னாரது உடல் மரப்பாலம் இடுகாட்டில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய இடத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம்
புதுச்சேரி, ஜூலை 4- புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக ஜூன் 16ஆம் தேதி முதல் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்காக அந்தோணியார் கோவில் முதல் ரயில்வே கேட் வரை ஒரு பக்க மாக இருசக்கர வாகனங்களை நிறுத்த புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி அங்கு பார்க்கிங் கட்டணத்தை அறி முகப்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் புதுச்சேரி நகராட்சி கடலூர் சாலையில் கட்டண பார்க்கிங் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வெ.வைத்தியலிங்கம் நன்றி
புதுச்சேரி, ஜூலை 4- புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்தியலிங்கம் போட்டி யிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்கும் கூட்டம் முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகரில் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை விட அமோகமாக வெற்றிபெற செய்த வாக்கா ளர்களுக்கு வெ.வைத்தியலிங்கம் நன்றி தெரிவித்துக் கொண்டார். மாநில மக்கள் பிரச்சனைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க உறுதுணையாக இருப்பேன் என்றார்.மேலும் புதுச்சேரியில் ரேசன் கடை களை திறக்க வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கும் முயற்சியை மாநில அரசு கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தினார்.நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் சிபிஎம் மாநில செய லாளர் ஆர்.ராஜாங்கம்,மூத்த மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள்,தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.