புதுச்சேரி பாகூர் கொம்யூன் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப் பை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் பாகூர் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில குழு உறுப்பினர் கலியன் தலைமை தாங்கினார். சிபிஎம் பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன், அரசு ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன முன்னாள் தலைவர் நா.சண்முகம், கௌசிகன்,சஞ்சய் சேகர் (வாலிபர் சங்கம்) மற்றும் அஜித்குமார், ெஜயராஜ், யுவராஜ் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.