புதுக்கோட்டை, மார்ச் 12- தங்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் குறித்து பெண்கள் மௌனம் காப் பது குற்றங்களை அதிகரிப்ப தற்கு பெண்களே இடம் கொடுப்பதாகிவிடும் என்றார் காவல்துணைக் கண்கா ணிப்பாளர் லில்லிகிரேஸ். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பில் மக ளிர்தினக் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் பங்கேற்று திருச்சிராப்பள்ளி காவல் துணைக் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் பேசியது: பெண்களின் பாதுகாப் புக்கென்று சட்டத்தில் பல் வேறு பிரிவுகள் உள்ளன. ஒரு ஆண் தவறான எண்ணத் துடன் பின்னால் வந்தாலோ, பார்த்தாலோ கூட அது குறித்து புகார் அளித்தால் மூன்று வரு டங்கள் வரை தண்டனை பெற்றுத்தர முடியும். பெண் கள் காவல்நிலையம் செல்வ தற்கோ புகார் அளிப்ப தற்கோ தயங்கக் கூடாது. பெண்கள் மௌனம் காப்ப தென்பது பெண்களுக்கெதி ரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு நாமே இடங் கொடுத்தாய் ஆகிவிடும். பெண்கள் அடுத்தவர் களுக்காக குரல்கொடுக்கி றீர்களோ இல்லையோ தங்க ளுக்காக தாங்களே குரல் கொடுக்க கொஞ்சமும் தயங் கக் கூடாது. பெரிய அளவில் ஊடகங்களில் வெளிவந்து நம்மை அதிர்ச்சியுறச் செய்த ஒரு பாலியியல் குற்றத்தின் விசாரணையில் அந்த குற்ற வாளி அதற்கு முன் அறுப துக்கும் மேற்பட்ட அதுபோன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந் தது. முதல் குற்றத்திலேயே அவன்மீது புகார் அளிக்கப் பட்டிருந்தால் அவ்வளவு பெண்களையும் காப்பாற்றி யிருக்கலாம் என்றார். கருத்தரங்கிற்கு கிளைத் தலைவர் அ.மணிமேகலை ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்டத்தலை வர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் ஸ்டாலின்சரவ ணன், மருத்துவர் மணிமலர் உள்ளிட்டோர் பேசினர். காந்திநகர் தொடக்கப்பள்ளி மாணவிகளின் நடனநிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கிளைத்தலைவர் சாந்தி நாகமுத்து வரவேற்க, பொரு ளாளர் த.ரஞ்சனி நன்றிகூறி னார்.