புதுக்கோட்டை, டிச.20- நபார்டு வங்கியின் சார்பில் வளம் சார்ந்த கடன் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.7291.10 கோடி கடன் வழங்கப்பட உள்ளது. 2023 - 24 ஆம் ஆண் டிற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளதாவது: நபார்டு வங்கியின் 2023 - 24 ஆம் ஆண் டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக் கையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முன்னுரிமை கடனாக ரூ.7291.10 கோடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறு கிய கால பயிர்க்கடனாக ரூ.4306.33 கோடி யும், நீண்ட கால கடனாக ரூ.1385.25 கோடி யும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இதே ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மதிப் பீடு ரூ.400.93 கோடி எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு முன்னு ரிமை கடன் இலக்கை விட, 2023-24 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் 14.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, முதன்மை வங்கி மண்டல மேலா ளர் ஆர்.வி.லீலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், தாட்கோ மாவட்ட மேலாளர் முத்துரெத்தினம், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்கு நர் ஜெ.கலைச்செல்வி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.