புதுக்கோட்டை, ஜூலை 18- புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ் வரா மெட்ரிக். பள்ளி யுகேஜி மாணவர்கள் வியாழக் கிழமை புதுக்கோட்டை உழ வர் சந்தையில் களப்பயணம் மேற்கொண்டனர். பள்ளிக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்க றிக் கடைகள் ஒவ்வொன்றுக் கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய் கறிகளின் பெயர்களையும் விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்துகொண்டனர். விற் பனை செய்யும் கிராமத்து மக்களும் அன்போடு வரவ ழைத்து அவர்களின் ஆர் வத்தை பாராட்டி நெல்லி, கொய்யா, வெள்ளரிக்காய், வாழைப்பழம் ஆகிய பழங் களை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தெரிவிக்கையில், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல பாடங்களில் படங்களில் உள்ள பொருட்களை நேரடி யாக கண்டு மாணவர்கள் அறிந்துகொள்ள இது மாதிரி களப்பயணங்களை தொடர்ந்து எங்கள் பள்ளி யில் முன்னெடுக்கின்றோம் என்றார்.