districts

img

காலியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, மார்ச் 22- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சந்திரா, சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா ஆகியோர் விளக்கிப் பேசினர்.
அறந்தாங்கி
 அறந்தாங்கி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத் தலைவர் என்.இந்திராதேவி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் கே. முத்துலெட்சுமி, டி.பத்மா, வட்டாரச் செயலாளர் எஸ்.செல்வி, வட்டார துணைத் தலைவர்கள் ஏ.மேரி, எம். முத்து, சிஐடியு மாவட்டச் செய லாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் வட்டாரத் தலைவர் டி.சாந்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் எஸ்.மகேஸ்வரி, சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் சி.அன்பு மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கீரனூரில் ஏ.மாரியம்மாள் தலைமை யில் மாவட்டப் பொருளாளர் எஸ்.சவ ரியம்மாள், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.மணிமாறன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கறம்பக்குடியில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.மாரி யம்மாள் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.லதா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மிடறு முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிமளத்தில் எம்.செவந்தியம்மாள் தலைமையில் மாவட்ட இணைச் செய லாளர் ஏ.அம்பிகா, சமூகநலத்துறை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  இதேபோல் மாவட்டத்தில் உள்ள  அனைத்து வட்டாரத் தலைநகரங்களி லும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.