புதுக்கோட்டை, அக்.3 - காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 11 அன்று பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற் கும் மனித சங்கிலி இயக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறு கிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இடதுசாரி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சிகளின் சார்பில் அக்.2 அன்று தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என அக்கட்சிகளின் தலைமை அறிவித்து இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், மேற்கண்ட அமைப்பு களோடு காங்கிரஸ், மதிமுக, திக. முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி களும், ஜனநாயக அமைப்புகளும் இணைந்து அக்.11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என மேற்கண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறி வித்துள்ளனர். இந்த மனித சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகர மாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் மாத்தூர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த. செங்கோடன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் இப்ராஹிம்பாபு, திக மாவட்டச் செய லாளர் அறிவொளி, விசிக மாவட்டச் செய லாளர் செப.பாவாணன், சசி.பா.கலை வேந்தன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அஸ்ரப்அலி, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் துரை முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை புதுக்கோட்டை, அறந் தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, கீரனூர், அன்னவாசல், மண மேல்குடி, பொன்னமராவதி ஆகிய 9 மையங் களில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மேற்படி கட்சி அணிகள், மக்கள் ஒற்று மையை விரும்பும் அமைப்புகள், பொது மக்கள் என மாவட்டம் முழுவதும் பல்லாயிரக் கணக்கானோரை திரட்டுவது எனவும், இது குறித்து மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.