districts

img

கட்டுமாவடியில் கனமழை: வீட்டுக்குள் புகுந்த கழிவுநீர்

அறந்தாங்கி, ஜூன் 7- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் 4 நாட்களாக பெய்த  கனமழையால், மழை நீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொது மக்கள் பாதிப்படைந்தனர்.

தமிழக முழுவதும் பல்வேறு பகுதி களில் கோடை மழை பெய்து வருகிறது. இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள் ளது. கடலோரப் பகுதியான கட்டுமாவடி யில் தொடர்ந்து நான்கு நாட்களாக மழை பெய்தது. இதனால் தாழ்வான  பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. 

கட்டுமாவடி புதுமனை தெருவில் வடிநீர்  வாய்க்கால்களில், மழைநீர் செல்ல வழி இல்லாததால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து  வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி னர். எனவே ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட  நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து, வடிகால் களை சீரமைத்து, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;