districts

img

தேனீர் விருந்து வைத்து ரூ. 48 ஆயிரம் வயநாடு நிவாரண நிதி அளித்தவருக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஆக.29-  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த மாங்க னாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் மகன் சிவக்குமார். இவர் வம்பன் நால் ரோடு பகுதியில் தேனீர் கடை நடத்தி வந்தார். கடந்த 2018-ல்  வீசிய கஜா புயலின் போது புதுக் கோட்டை மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். அப்போது தனது தேனீர் கடையில் பாக்கியாக வைத்திருந்த கடன் தொகை முழு வதையும் ரத்துசெய்வதாக அறிவித்த தோடு கஜா புயல் ஏற்பட்ட காலத்தில் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக தேனீர் வழங்கியும் அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

அப்போது கறம்பக்குடியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிவக்குமாரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

ரூ. 48,200 நிவாரண நிதி

தற்பொழுது புதுக்கோட்டையை அடுத்த கேப்பறை என்ற இடத்தில் தேனீர் கடை நடத்திவரும் சிவக்குமார்.  வயநாடு நிவாரண நிதிக்காக ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதா வது கடந்த 12.08.2024 அன்று தனது கடை யில் தேனீர் விருந்து நடத்தினார். அவர்  வழங்கும் தேனீருக்குப் பதிலாக வய நாடு நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை செய்து உதவு மாறு வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.

அதன்படி ஏராளமானோர் கடந்த ஆக.12 அன்று தனது தேனீர் கடைக்கு வந்து மொய் அளித்துவிட்டுச் சென்ற னர். அதிலிருந்து கிடைத்த ரூபாய் 48 ஆயிரத்து 200–ஐ வங்கியில் கேரள மாநில முதலமைச்சரின் நிவாரண நிதி க்கு வரைவோலையாக எடுத்துள்ளார்.

இந்த வரைவோலையை செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடம் சமர்பித்தார். வரைவோலையைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சிவக் குமாருக்கு சால்வையும் புத்தகங்களும் அளித்துப் பாராட்டினார்.