புதுக்கோட்டை, நவ.29- புதுக்கோட்டை வாசகர் பேரவையும் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண வர்களுக்கு போட்டிகள் நடத்தின. மாவட்ட அளவில் பள்ளி மாணவர் களுக்கு அழ.வள்ளியப்பாவின் பாடல் ஒப்புவித்தல், பேச்சு மற்றும் ஓவியப் போட்டி கள் நடத்தப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நவம்பர் 30 அன்று நடைபெறும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பரிசுகள் வழங் கப்படும். விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, அழ.வள்ளியப்பாவின் குடும்பத்தினர் பங்கேற்க உள்ளதாக வாச கர் பேரவைத் தலைவர் பேரா.விஸ்வ நாதன், பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.