districts

img

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க! எம்.சின்னதுரை எம்எல்ஏ வலியுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.13 - கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத் துப் பகுதிகளும் பயனடையும் வகை யில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த  வேண்டும் என்றார் கந்தர்வகோட்டை  தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான மறுவாழ்வு  மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமையில், திருச்சிராப் பள்ளி தொகுதி மக்களவை உறுப்பி னர் சு.திருநாவுக்கரசர், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகி யோர் முன்னிலையில் திங்கள் கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசியதாவது: காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நூற்றாண்டு கனவுத் திட்டம். ஒரே வாய்க்கால் மூலம் திட்டம் நிறைவேற்றப்பட்டால் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் பலனளிக்காது. கிளை வாய்க்கால்களை அமைத்து  மாவட்டத்தில் உள்ள 6 காட்டாறு களையும் இணைக்க வேண்டும். அப்படி இணைப்பதன் மூலம் மாவட் டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி,  குளங்களில் தண்ணீரை சேமித்து  வைக்க முடியும். இதன் மூலம் குளத்திலிருந்து நேரடியாக பாசனத் திற்கு தண்ணீர் கிடைப்பதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே, இத்திட்டத்திற்கு கூடுதலாக  நிதி ஒதுக்கீடு செய்து மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும்  பயனடையும் வகையில் செயல் படுத்த வேண்டும்.

குன்றாண்டார்கோவில் ஒன்றி யம் புலியூரில் 24 வீடுகளும், வத்தா குறிச்சியில் ஒரு வீடும் இத்திட்டத்திற் காக கையகப்படுத்த வேண்டியுள் ளது. இவர்களுக்கு நியாயமான இழப் பீட்டுத் தொகை வழங்குவதோடு, அவர்களை மறு குடியமர்வுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இத்திட்டத் திற்காக நிலங்கள், வீடுகள், கிணறு கள், மரங்களை கையகப்படுத்தும் போது உரிமையாளர்களுக்கு பார பட்சமின்றி சரியாக கணக்கீடு செய்து  இழப்பீடு வழங்க வேண்டும். இத்திட் டத்தை விரைந்து முடிக்கும் வகை யில் போதிய பணியாளர்களை நிய மிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். சு.திருநாவுக்கரசர் எம்.பி., பேசு கையில், “இத்திட்டத்திற்காக விராலி மலை, குளத்தூர் மற்றும் புதுக் கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர்  பட்டா நிலங்களை கையகப்படுத்த வும், 150.60 ஹெக்டேர் அரசு புறம் போக்கு நிலங்கள் நிலமாற்றம் செய்யப்படவும் உள்ளன. மேற்கண்ட திட்டத்திற்காக 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல் நிலை அறிவிக்கை வெளியிடப்பட் டுள்ளது.  தனிநபர் பேச்சுவார்த்தை மூலம்  குன்னத்தூர், புலியூர், வத்தனா குறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிரா மங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15  கோடி மதிப்பிற்கு கையகப்படுத்தப் பட்டுள்ளன. முதற்கட்டமாக விராலி மலை தாலுகா, குன்னத்தூர் கிரா மத்தில் நீர்வளத்துறை மூலம் கால் வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று  வருகிறது” என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி- வைகை-குண்டாறு) ஆர்.ரம்யா தேவி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.