districts

img

நிலைத்தகு வளர்ச்சிக்கான பிரச்சார உபகரணங்கள் தயாரிப்பு பயிற்சி பட்டறை

புதுக்கோட்டை, ஜன.8- அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆய்வு மையத் திட்டம்  மற்றும் வளர்ச்சித்துறை உதவி யுடன் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்தகு வளர்ச்சிக்கான இலக்குகளை விளக்குவதற்கான பிரச்சார உபகரணங்கள் தயாரிப்பு  பயிற்சிப் பட்டறை புதுக்கோட் டையில் நடைபெற்றது.  புதுக்கோட்டை அரசு கல்வி யியல் கல்லூரியில் நடைபெற்ற இப் பட்டறைக்கு அறிவியல் தொழில்நுட் பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். முகாமை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கருணா கரன் தொடங்கி வைத்தார். திட்டம்  மற்றும் வளர்ச்சித்துறை மாநில ஆலோசகர் சுஜாதா, வளர்ச்சி ஆய்வு மைய இயக்குநர் சுப்பிர மணி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், உதவித் திட்ட இயக்கு நர் எஸ்.செல்வராஜ், புதுக்கோட்டை  மகளிர் கல்லூரி முதல்வர் புவ னேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம்,  நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப் பாளர் ஜோயல் பிரபாகர், அறிவியல்  இயக்க நிர்வாகிகள் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசி னர். பயிற்சியில் பல்வேறு கல்லூ ரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மக ளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற் றனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீர முத்து வரவேற்க, பொருளாளர் விமலா நன்றி கூறினார்.