புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமை வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பரிசுகளை வழங்கினார்.