புதுக்கோட்டை, நவ.13- பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் போதே அதற்குரிய பாடப் புத்தகங்களை முறையாக படித்தாலே போட்டித் தேர்வு களை எதிர்கொள்வது எளிது என்றார் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி யை அடுத்த வடகாடு தாய்த்தமிழ் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாதிரி தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல் நிலைத் தேர் வில் வெற்றி பெற்றுள்ள 32 பேரை பாராட்டி ரவிச்சந்திரன் பேசியதாவது: “முதலில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவிகளுக்கு இலக்கு நிர்ண யிக்க வேண்டுமே தவிர, முதலிலேயே மிக கீழ்நிலைப் பணிகளே போதுமென நிர்ண யிக்கக் கூடாது. உயர்ந்த பதவிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகும்போது கீழ்நிலை தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற்று விட லாம். போட்டியாளர்கள் ஒவ்வொருமுறை யும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். ஏனெ னில், உங்களுக்குப் பின்னால் ஒவ்வொரு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் புதிய போட்டியாளராக வந்துகொண்டு இருக்கி றார்கள். போட்டித் தேர்வுகள் மூலம் கிடைக்கும் அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும் அதற் கான தேர்வுகள் குறித்தும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். படித்ததைத் தங்களு டன் படிக்கும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுவதன் மூலமும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்து வதன் மூலமும் இன்னும் கூடுதலாக கற்றுக் கொள்ளலாம். பொதுவாக, பள்ளி முதல் கல்லூரி வரையில் படிக்கும்போதே அதற்கு ரிய பாடப்புத்தகங்களை முறையாக படித் தாலே போட்டித் தேர்வுகளை எதிர்கொள் வது மிகவும் எளிதானது” என்றார். நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் மு.ராஜா தலைமை வகித்தார். நாணய வியல் கழகத்தின் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி, கிராம நிர்வாக அலுவலர் கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.