நாமக்கல், மார்ச் 1- பள்ளிபாளையம் அருகே வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் ஒன்றியம், கலியனூர் ஊராட்சிக்குட் பட்ட கண்ணதாசன் வீதி, பெருமாள் கோவில் வீதி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இந்து அறநிலை யத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், விசைத்தறி கூலித் தொழிலாளர்களாக பணியாற்றும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக் கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வரு வாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிக ளுக்கு தொடர்ந்து மனு வழங்கி வந்த னர். ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் கலியனூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை யிட்டு, வாக்காளர் அட்டையை ஒப்ப டைத்து, கிராம நிர்வாக அலுவலர் திவ் யாவை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், பட்டா வழங்கும் வரை அலுவலகத்தை விட்டு வெளியே வர மாட்டோம் எனவும், உடன டியாக பட்டா வழங்கப்படாத பட்சத்தில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகிய வற்றை ஒப்படைத்துவிட்டு போராட்டத் தில் ஈடுபடுவோம் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமார பாளையம் வட்டாட்சியர் சண்முக வேல், பள்ளிபாளையம் காவல் ஆய்வா ளர் சுகுமார், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட அதி காரிகள் பொதுமக்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பட்டா கேட்கும் பொதுமக்கள் வசிக்கும் இடம் இந்து அறநிலைத்துறைக்கு சொந்த மான இடம் என்பதால் உடனடியாக பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளது. எனவே, பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு, பட்டா வழங்குவதற்கு ஏற் பாடு செய்து தரப்படும் என வட்டாட்சியர் சண்முகவேல் உறுதியளித்தார். அதன் பேரில் போராட்டக்காரர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.