districts

ஜாமீன் கையொப்பமிட்டவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

நாமக்கல், நவ.26- வங்கியிடம் பெற்ற கடனையும், வட்டியையும் செலுத்திய பின்னர், அசல் ஆவணங்களை ஜாமீன் கையொப்பமிட்டவரிடம் வழங்கிய வங்கி, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள அணிமூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் கே.தமிழரசன் (34). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரிக் யூனிட் லாரியையும், அதன் சப்போர்ட் லாரியையும் வாங்குவதற்கு திருச் செங்கோட்டிலுள்ள இண்டஸ்இண்ட் வங்கியில் ரூ.52 லட்சம் கடன் பெற் றுள்ளார்.

கடன் வாங்கிய போது, வாங்கப்பட்ட வாகனங்களின் பதிவு சான்றிதழ்களில் அடமான விப ரத்தை பதிவு செய்து கொடுத்த தோடு, இவரது தாயார் பெருமாயி பெயரில் உள்ள நிலத்தின் அசல் ஆவணத்தையும் வங்கிக்கு அடமா னமாக கொடுத்துள்ளார். 2022 ஆம்  ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெற்ற கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக வங்கியில்  செலுத்தியதால் தமிழரசனின் கடன் கணக்கு முடிக்கப்பட்டு விட் டது. பிறகு, வங்கியில் சமர்ப்பித்த தாயாரின் பெயரில் உள்ள நிலத் தின் அசல் ஆவணம், கடன் நிலு வையில் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் போக்குவரத்து துறையில் பதிவு சான்றிதழ்களில் இருந்த அட மான பதிவை நீக்குவதற்கான தடை யின்மை சான்று ஆகியவற்றை தமி ழரசன் வங்கியில் பலமுறை கேட் டுள்ளார்.

அவற்றை வழங்குமாறு வங்கிக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்புக்கும் வங்கி எவ்வித பதி லையும் தரவில்லை. தமக்குத் தெரியாமல் மோசடி யாக வாகனங்களுக்கு பெயர் மாற் றம் நடந்து விடக்கூடாது என்பதற் காக ஆட்சேபணையை வட்டார  போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப் பிக்க சென்றபோது, தமிழரசனின் இரண்டு வாகனங்களும் கார்த்தி  என்பவரின் பெயருக்கு மாற்றப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. இத னால் அதிர்ச்சியடைந்த அவர் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத் தில் கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வங்கியின் மீது வழக்கு தொடுத் தார்.

திருச்செங்கோடு அருகே உள்ள குட்டி மேய்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் கார்த்தி என்பவர், தமிழர சன் வங்கியில் பெற்ற கடனுக்கு ஜாமீன் கையொப்பம் செய்திருந் தார். தமிழரசனின் கடன் கணக்கு முடிக்கப்பட்ட பிறகு தமிழரசனுக் கும், கார்த்திக்கும் ஏற்பட்டிருந்த சம்மத பத்திரம் ஒன்றை கார்த்தி, தங்கள் வங்கியில் சமர்ப்பித்தார். அதில் தமிழரசன் வங்கியில் பெற்ற கடனை செலுத்துவதில் தாமதம் ஏற் பட்டால், முழு கடனையும் செலுத் தவும், அசல் ஆவணங்களை பெற் றுக் கொள்ளவும் கார்த்திகிற்கு தமி ழரசன் சம்மதம் வழங்கியிருந்தார்.

இதனால் அவரிடம் தாங்கள் அசல் ஆவணங்களை வழங்கினோம் என்று வங்கியின் தரப்பில் நீதிமன் றத்தில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற  நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோர் திங்களன்று தீர்ப்பு வழங் கினார். அதில், ஜாமீன் கையொப் பம் செய்த கார்த்தி, வங்கியில் சமர்ப் பித்த பதிவு செய்யப்படாத சம்மத பத்திரத்தின் உண்மை தன்மையை  அறியாமல், கடன் பெற்ற தமிழர சனை நேரில் வரவழைத்து விசாரிக் காமல், அசல் ஆவணங்களை ஜாமீன் கையொப்பம் செய்தவரி டம் வழங்கியது சேவை குறைபாடு  என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மேலும், வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்தில் தமிழரச னின் வாகனங்களின் பதிவு புத்தகங் களில் அடமான பதிவை நீக்க, வங்கி வழங்கிய தடையின்மை சான்று  இல்லாமல் பெயர் மாற்றம் செய்ய முடியாது. வங்கியின் தரப்பில் கார்த் தியிடம் தடையின்மை சான்றை  வழங்கியதால், அவர் அதனை பயன் படுத்தி வாகனங்களை அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய் துள்ளார். இதற்கு காரண கர்த்தா வாக அமைந்த வங்கியின் செயல் முறையற்ற சேவை என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தாக்கல் செய்தவரின் தாயார் பெருமாயி பெயரில் உள்ள  சொத்தின் அசல் ஆவணத்தையும், சேவை குறைபாடு காரணமாக ஏற் பட்ட வாகனங்களின் உரிமை இழப் புக்கு நிவாரணமாக ரூ.25 லட்சமும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற் றும் மன உளைச்சலுக்கு இழப்பீ டாக ரூ.5 லட்சமும் தமிழரசனுக்கு வங்கி நிர்வாகம் நான்கு வாரங்க ளுக்குள் வழங்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டது.