நாமக்கல், ஜூன் 11- நுகர்வோரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியும், நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்திய தனியார் நிறுவனத்திற்கு கிடுக்கிப்பிடி போட்டு இழப்பீட்டை வழங்க வைத்துள்ளது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம். நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலை பரணி நகரில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது மனைவி உதயப் பிரியா. இவர் வீட்டு உபயோக பொருட் களை விற்பனை செய்யும் பிரபல யுரேகா ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு இவரின் வீட் டிற்கு சிசிடிவி கேமரா பொருத்துவ தற்கு ரூபாய் 65 ஆயிரத்தை கடந்த 2019 அக்டோபர் மாதத்தில் செலுத்தி யுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம் கட்டணம் இல்லாமல் ஹாலிடே ரிசார்ட்டில் மூன்று நாட்கள் குடும்பத்துடன் தங்கிக் கொள்ள வவுச் சர் ஒன்று வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து, வாடிக்கை யாளரால் கேட்டுக்கொண்ட உரிய காலத்தில் பொருத்தித் தராமல் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து வலியுறுத்திய பிறகு 2022 ஆம் ஆண்டில் கேமராவை பொருத்தியுள்ளது.
அதிலும் ஒரு கேம ராவை பொருத்தவில்லை. மேலும், இந் நிறுவனம் அளித்த ஹாலிடே ரிசார்ட்டில் தங்குவதற்கு வழங்கப்பட்ட வவுச்சரும் காலாவதியானதாக இருந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கை யாளர் யுரேகா நிறுவனத்தின் மீது நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ. ராம ராஜ், உறுப்பினர் ஆர். ரமோலா ஆகி யோர் வழங்கிய தீர்ப்பில் இழப்பீடாக ரூ.60 ஆயிரம் மற்றும் வழக்கின் செலவு தொகையையும் நான்கு வார காலத் திற்குள் தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என ஜனவரி மாதத்தில் உத்த ரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத் தரவை இந்நிறுவனம் உதாசீனப்படுத்தி யுள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தர வுப்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க தவறியதால் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் உதயப் பிரியா வீட்டு உபயோக பொருட்கள் விற் பனை நிறுவனத்தின் கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் மனு தாக்கல் செய் திருந்தார். இதனைத் தொடர்ந்து திங்களன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் ஆஜரான பிரபல வீட்டு உப யோக விற்பனை நிறுவனத்தின் கிளை மேலாளர் நீதிமன்ற உத்தரவுபடி இழப் பீட்டுத் தொகையும் செலவு தொகை யும் காலதாமதத்திற்கான வட்டியும் சேர்த்து ரூ.76,280-க்கான வரைவோ லையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி வீ.ராமராஜ் உதயபிரியாவிடம் வழங்கினார். நுகர்வோர் நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகளை நிறைவேற்ற தவறினால் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் அதிகாரம் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு 2019 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.