districts

img

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

நாமக்கல், ஜூன் 6- ராசிபுரம் அருகே சரக்கு லாரி ஒன்று சாலையோரம்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல்லில் இருந்து, ராசிபுரம் வழியாக சவுக்கு மரக் கட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆத்தூரை நோக் கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த குடியிருப்பு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து நாமகி ரிப்பேட்டை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணை யில், லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்ப வம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;