districts

img

கணக்குதாரர்களுக்கு தெரியாமல் பணம் எடுப்பு:எட்டுக்குடி இந்தியன் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,  ஜூன் 19- நாகப்பட்டினம் மாவட் டம் எட்டுக்குடி ஊராட்சி யில் இயங்கி வரும் இந்தி யன் வங்கியில் கணக்கு தாரர்களுக்கே தெரியாமல் பணம் எடுக்கப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எட்டுக்குடி இந்தியன் வங்கியில் மகளிர் சுய உத விக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பயனாளிகளின் அனுமதி இல்லாமல், பயனாளிகளுக்கே தெரியா மல் அவர்களுடைய தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்த எட்டுக்குடி இந்தியன் வங்கி மேலாளர் மற்றும் நிர்வா கத்தை கண்டித்தும், மகளிர் சுய உதவிக்குழு கடன் வாங்கிய பயனாளிகள் அனைவரது வங்கக் கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது. அத னால் பயனாளிகள் 100 நாள் வேலை ஊதியம் மற்றும் இதர பணப்பரிவர்த்தனை எதுவும் செய்ய முடியாமல் முடக்கியுள்ளதைக் கண்டித் தும் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கீழையூர் ஒன்றி யச்செயலாளர் டி. வெங்கட் ராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து, கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி,மாவட்டக்குழு உறுப்பினர் கே.சித்தார்த்தன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.