நாகப்பட்டினம், ஜூலை 21- நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஒன்றியம் சிக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் வேண்டி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட் டச் செயலாளர் வி.மாரிமுத்து கண் டன உரையாற்றினார். தேமங்கலம், வடகுடி ஊராட்சிமன்ற அலுவல கத்தில் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகை வடக்கு ஒன்றியச் செயலா ளர் வி.வி.ராஜா. பி.கே.ராஜேந்தி ரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் சிக் கல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குடிநீர், சாலை, சிக்கல் சிங் காரவேலர் கோயிலுக்குச் சொந்த மான குளங்களை தூர்வாரி தூய் மைப்படுத்துதல், நீர்நிலை புறம் போக்குகளில் உள்ளவர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கவும், நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து ரூ.381 வழங்கவும், 60 வயதை கடந்த வர்கள் முதியோர் உதவித்தொகை வழங்கிடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.