நாகப்பட்டினம், மார்ச் 26- நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள பெரிய நரியங்குடி மக்களுக்கு இல வச வீட்டு மனை பட்டாவை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப் பினர் வி.பி.நாகைமாலி வழங்கினார். நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்கு உட்பட்ட பாப்பா கோவில் ஊராட்சியில் ஓடம் போக்கியாறு பாய்கிறது. இதன் கரைகளில் வாழ்ந்து வந்த மக்களுக்கு நீண்ட கால மாக பட்டா வேண்டும் என்று போராடி வந்தனர். இந்நிலை யில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலியை சந்தித்து மனு கொடுத்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று பாப்பா கோவில் ஊராட்சியில் ஓடம் போக்கியாறு கரைகளில் குடி யிருக்கும் மக்களை சந்தித்து பேசி, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இந்தக் கோரிக்கையை அர சின் கவனத்திற்கும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு சென்று அம்மக் களை மாவட்ட ஆட்சியருடன் சந்தித்து பேசவும் வைத்தார். இடைப்பட்ட காலங்க ளில் இந்த ஆண்டு கடுமை யாக மழை பெய்த போது, அந்த ஆற்றின் கரைகளில் குடியிருந்த மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். அப்போதெல்லாம் நேரடியா கச் சென்று அம்மக்களுக்கு ஆறுதல் கூறி இலவச வீட்டு மனைப் பட்டா விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருந்தார். சிபிஎம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடிவேலு மற்றும் அப்பகுதியை சேர்ந்த வர்களுடன் மாவட்ட ஆட்சி யரை சந்தித்து, கோரிக்கை சம்பந்தமாக அடிக்கடி பேசி னார். இதன் விளைவாக சனிக் கிழமை அப்பகுதி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் படும் என்று அறிவித்தார். பெரிய நரியங்குடி பகுதி யில் ஓடம்போக்கியாறு கரை களில் வாழ்கிற 47 குடும்பங்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்ற பட்டா வழங்கும் நிகழ் வில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப் ்பட்டது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுத மன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்பு ராஜ் ஆகியோர் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினர்.