districts

img

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

தேனி, மே 13- பெரியகுளம் கும்பக்கரை அருவி யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்தானது அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக் கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதி களில் பெய்யும் மழையால் நீர்வரத்து வரும்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக முற்றிலும் மழை பெய்யாத நிலையில் அருவிக்கு வரும்  நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப் பட்டது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பய ணிகள் குறைந்த அளவு நீரில் பல மணி நேரம் காத்திருந்து குளித்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து வியாழனன்று அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தற்போது அரு விக்கு நீர் வரத்து அதிகரித்து அருவி யில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வரு கிறது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

;