தேனி, ஜூன் 8- காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் செவ்வாய், புதன்கிழமை களில் தேனி மாவட்டம் முழுவதும் நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆண்டிபட்டியில் மாவட்ட தலைவர் பி.ரவி தலைமையில் நடைபயணம் துவங்கியது. மாவட்டச் செயலாளர் பி.பவானி, மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் கலா, மாநில பொருளாளர் திலகவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடமலைக்குண்டு, சின்னமனூர், கம்பம், பாளையம், போடி, தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் நடைபயண பிரசாரத் திற்கு சிஐடியு, அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு
கடமலை-மயிலை ஒன்றியம் கடமலை குண்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் பேரணி நடைபெற்றது. இந்த பேர ணிக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கி னார்.முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கலாம் கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் முத்தையா பேரணியை தொடங்கி வைத்தார்.