districts

img

செங்கோட்டையில் “இந்தியா கூட்டணி” வெற்றிக் கொண்டாட்டம்

தென்காசி, ஜூன் 6- நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் “இந்தியா கூட்டணி”  வெற்றி பெற்றது. அதன் வெற்றி கொண்டாட் டம் செங்கோட்டையில் நடை பெற்றது.

செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமையில் அண்ணல் மகாத்மா காந்தி சிலை, பேரறிஞர் அண்ணா சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் “இந்தியா கூட்டணியின்” வெற்றியை கொண்டாடினர்.  

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பி னர் செங்கோட்டை முத்து சாமி, செங்கோட்டை நகர  காங்கிரஸ் தலைவர் .ராமர்,  மாவட்ட திமுக. பகுத்த றிவு பேரவைத் தலைவர் வழக்கறிஞர் ஆபத்துக் காத்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வேலுமயில், கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், சங்கர்,இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலா ளர் சுப்பிரமணியன், காங்கி ரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை மாவட்ட பொதுச் செய லாளர் ராஜீவ் காந்தி மற்றும் “இந்தியா கூட்டணி” கட்சி களின் நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.

;