districts

img

சொத்துக்களைப் பணமாக்கும் தனியார்மயத் திட்டங்களைக் கைவிடுக!

தூத்துக்குடி,ஜூலை 25- குறைந்தபட்ச ஊதியம்,சட்ட சலு கைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சிஐடியு தலைமையில் துறைமுகத் தொழிலாளர்கள் நாடு தழுவிய அள வில் ஜூலை 25.26 ஆகிய தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரிய உயர்நீதிமன்றத்தை தீர்ப்பை அமல்படுத்தவும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி துறை முகத்தில் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் 12 பெரிய துறைமுகங் களான மும்பை, கொல்கத்தா, சென்னை,  கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப்,  காண்ட்லா, மர்மகோவா, நியூமங்க ளுர், மும்பை ஜவகர்லால் நேரு, தூத்துக் குடி, எண்ணூர் ஆகிய துறைமுகங்க ளில் செயல்படும் 5 சம்மேளனங்களில் ஒன்றான நீர்வழி போக்குவரத்து ஊழி யர் சம்மேளனம் இந்த துறையில் செயல்படும் 3-வது பெரிய சம்மேள னமாகும். ஜூலை 7-8 ஆகிய தேதி களில் சிஐடியுவுடன் இணைந்த நீர்வழி  போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம், துறைமுகங்களில் நிலவும் அசாதாரண நிலைக்கு எதிராக அனைத்து  துறைமுகங்களிலும் ஜூலை 25-26  தேதிகளில் இரண்டு நாட்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதனடிப்படையில் அனைத்து துறைமுகங்களிலும் இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த  போராட்டத்தில் துறைமுகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு  காண்பதற்கான நடவடிக்கைகளும், துறைமுக தொழிலாளர்கள் பிரச்சனை களும் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் 12 பெரிய துறைமுகங் களான மும்பை, கொல்கத்தா, சென்னை,  கொச்சி, விசாகப்பட்டினம், பாரதீப்,  காண்ட்லா, மர்மகோவா, நியூமங்க ளுர், மும்பை ஜவகர்லால் நேரு, தூத்துக் குடி, எண்ணூர் ஆகிய துறைமுகங்க ளில் செயல்படும் 5 சம்மேளனங்களில் ஒன்றான நீர்வழி போக்குவரத்து ஊழி யர் சம்மேளனம் இந்த துறையில் செயல்படும் 3-வது பெரிய சம்மேள னமாகும். ஜூலை 7-8 ஆகிய தேதி களில் சிஐடியுவுடன் இணைந்த நீர்வழி  போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம், துறைமுகங்களில் நிலவும் அசாதாரண நிலைக்கு எதிராக அனைத்து  துறைமுகங்களிலும் ஜூலை 25-26  தேதிகளில் இரண்டு நாட்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதனடிப்படையில் அனைத்து துறைமுகங்களிலும் இரண்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த  போராட்டத்தில் துறைமுகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிக்கு தீர்வு  காண்பதற்கான நடவடிக்கைகளும், துறைமுக தொழிலாளர்கள் பிரச்சனை களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்திய வர்த்தக கட்டமைப்பில் மிக  முக்கிய பங்கு வகிக்கும் துறை முகங்கள் ஒட்டு மொத்த சரக்கு போக்கு வரத்தில் அளவில் 95 சதவீதத்தை யும், மதிப்பில் 68 சதத்தையும் கையா ளுகின்றன. 7517 கி.மீ நீள கடல் பரப்பில்  தற்போது அமைந்துள்ள 229 துறை முகங்களில் ஒன்றிய அரசுக்கு சொந்த மான 12 பெரிய துறைமுகங்களும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங் கும் 217 துறைமுகங்களும் அடங்கும். ஒன்றிய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்ச கத்தின் கீழ் பெருந்துறைமுக ஆணைய சட்டம் 2021-இன் மூலம் பெருந்துறைமுகங்கள் இயக்கப்படு கின்றன. துறைமுகங்களில் கட்ட மைப்பு மாற்றங்கள் மேற்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் தள்ளிவிடும் வகையில்  பெருந்துறைமுக சட்டம் 1963 அகற் றப்பட்டு துறைமுக தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை மீறி பெருந்துறைமுக ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

நிலச்சுவான்தார்களைப் போல துறைமுக நிர்வாகங்கள் 

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் 9 துறைமுகங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லாபம் குவிக்கும் கப்பல் தளங்கள் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகள்  முதல் 49 ஆண்டுகள் வரை நீண்டகால  குத்தகைக்கு விட்டு, அவர்கள் ஈட்டும்  வருவாயில் பங்கு பெறும் லேண்ட்லார்ட்  திட்ட முறையில் துறைமுக நிர்வா கங்கள் நிலச்சுவான்தார்களைப் போல  நடந்து கொள்வார்கள். துறைமுக வணிக நடவடிக்கைகளை முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் தள்ளி விட்டு அவர்களிடம் வருவாயில் பங்கு  பெற்றுக் கொள்ளும் நடைமுறை இது வாகும். இதன்படி ஏற்கனவே பெரும் லாபமீட்டி வந்த மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தின் அனைத்து கப்பல் தளங்களும் தனியார் நிறுவ னங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வேலை  பார்த்த தொழிலாளர்கள் பெரும் பகுதியினர் விருப்ப ஓய்வில் வெளி யேற்றப்பட்டு விட்ட பின்பு தற்போது  400 தொழிலாளர்கள் வேலையில்லா மல் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.

வேலைதேடும் இளைஞர்கள் மீது ஒன்றிய அரசு தாக்குதல்

துறைமுகத் தொழிலாளர்களது ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை  இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்படுத்தப்படும் ஊதிய  ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப் படுவது வழக்கம். 1.01.2022 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் இரண் டரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப் படுகிறது. துறைமுகத்தில் காலியாக உள்ள மூன்றாம், நான்காம் நிலை பணியிடங்கள் எதையும் நேரடி நிய மனம் மூலம் நிரப்பக் கூடாது, தேவை யெனில் காண்ட்ராக்ட் அல்லது அவுட்சோர்சிங் முறையில் நிரப்ப  வேண்டும் என்று ஒன்றிய கப்பல்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து வேலை தேடும் இளைஞர்கள் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. எல்லா நிலைகளிலும் நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கட்டு மானம் உள்ளிட்ட துறைகளில் வழங்கப் படும் குறைந்தபட்ச கூலி மட்டுமே சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கும், துறை முகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ள தொழிலாளர்களுக்கும் துறைமுக தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் இயக்கப்ப டும் கப்பல் தளங்களில் பணிசெய்யும்  தொழிலாளர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட சட்ட சலுகைககள் மறுக்கப் படுவதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுக கேண்டீன் ஊழியர்களை நிரந்தரம்  செய்யக் கோரிய நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துக!

தூத்துக்குடி துறைமுகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் துறை முக கேண்டீன் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். 1998 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் நிரந்தரம் கோரி தொடரப்பட்ட வழக்கு பல்வேறு நிலை களை தாண்டி உச்சநீதிமன்றம் வரை  சென்று 2019-ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்றத்துக்கு திருப்பப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிபதி குமரேஷ்பாபு அவர்க ளால் வழங்கப்பட்ட தீர்ப்பு அனைத்து தொழிலாளர்களையும் 1998 தேதி யிட்டு நிரந்தர தொழிலாளியாக கருத வும், பென்சன் உள்ளிட்ட ஓய்வு கால  பலன்கள் வழங்கவும், பணப்பலன்கள் தீர்ப்பு வழங்கப்படும் நாளில் இருந்து வழங்கவும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து மேல் முறையீடு செய்வதை கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரியும் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் ஜூலை 25 வியாழனன்று காலை 10 மணிக்குத் துவங்கிய போராட்டத்திற்கு துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க  தலைவரும் துறைமுக ஆணையக் குழு உறுப்பினருமான எஸ்.பால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

 சிஐடியு மாநிலச் செயலாளரும், அகில இந்திய நீர்வழி போக்கு வரத்து சம்மேளனத்தின் செயலாளரு மான ஆர்.ரசல் துவக்கி வைத்து  உரையாற்றினார்.  கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.காசி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.முனியசாமி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பா துரை, கட்டுமான தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.மாரியப்பன்,  உப்பு தொழிலாளர் சங்கத்தின் செயலா ளர் கே.சங்கரன், தூத்துக்குடி அனல் மின் நிலைய சிஐடியு செயலாளர் எஸ்.கணபதி சுரேஷ், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் பிச்சைமணி, தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ரவிதாகூர், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட பொருளாளர் ராமையா, துறைமுக முன்னாள் லேபர் டிரஸ்டிகள் ஜே.எம்.பி ராயன், எம்.கோபால், போர்ட் ஜெனரல் ஸ்டாப்  தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் லேபர் டிரஸ்டியுமான ஆர்.செல்வகுமார் ஆகியோர் ஆதரித்துப்  பேசினர்.

போராட்டத்தில் துறைமுக ஜனநா யக ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், பிஎஸ்ஏ சீகால் கண்டெய்னர் டெர்மினல் தொழி லாளர்கள், கேண்டீன் தொழிலா ளர்கள் என 100-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்கேற்றனர். இன்று நடை பெறும் போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் பி.பூம யில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.புவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து போராட்டத்தை நிறைவு செய்து பேசுகிறார்.