குடவாசல், மே 19- திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நன்னி லம் சட்டமன்ற தொகுதி சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் புதனன்று நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். குட வாசல், வலங்கைமான், நன்னிலம் திமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜோதிராமன், வி.அன்பரசன், கோ.தெட்சிணாமூர்த்தி, வரத.கோ.ஆனந்த், வே.மனோகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். ஓராண்டு சாதனையை விளக்கி தலைமை கழக பேச்சாளர் துறையூர் துரைபாண்டி யன்,மதுரை மாநகர வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொதுக்கூட்டத்தில் நன்னிலம் தொகு திக்குட்பட்ட நன்னிலம், குடவாசல், வலங் கைமான் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஊராட்சி, பேரூராட்சி கவுன் சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.