திருவாரூர், டிச.28- திருவாரூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு தையல் கலை தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் இரா.மாலதி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் முருகையன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட துணை தலைவர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட துணைச் செயலாளர் பி.என். லெனின், மாவட்ட பொருளா ளர் ஆர்.கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தையல் தொழிலா ளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், தையல் கடை களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும், வங்கி யில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.