districts

img

தோழர் ஏ.ஜெகநாதனின் 10ஆவது நினைவு தினம்

பள்ளிவர்த்தியின் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஏ.ஜெகநாதனின் 10ஆவது நினைவு தினம், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிவர்த்தியில் உள்ள தோழர் ஏ.ஜெகநாதன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தோழர் ஏ.ஜெகநாதனின் மகன் ஜெ.ஏங்கெல்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சண்முகவேலு, விதொச ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.